இப்படிப்பட்ட நிலையில் சீனா சும்மா இருக்கவில்லை. இந்தப் பயங்கரமான நோய் பரவாமல் தடுக்க என்னென்ன
நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று சிந்திக்க தொடங்கியது. பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெய்சிங்கில் அமைந்துள்ள SINOVAC BEIJING என்ற நிறுவனம் ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு மே திங்கள் 22ம் நாள் இந்தத் தடுப்பூசி மருந்து 36 தன்னார்வத் தொண்டர்களின் உடம்பில் செலுத்தி முதல் கட்ட மனித உடம்பு பரிசோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் திங்களுக்குள்ளாக இந்தக் தொண்டர்களின் உடம்பில் பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத கிருமிக் கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது SINOVAC BEIJING நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்தில் செயலற்ற தடுப்பூசி மருந்துகளின் பல தொகுதிகள் உள்ளன. இவற்றிலே ஒன்று ரசாயன நுட்பம் மூலம் கொல்லப்பட்ட கிருமிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி மருந்து பயன்மிக்கது என்று முதல் நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு இதை விற்பனை செய்ய முடியாது.
1 2