• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-07 00:04:02    
சீனாவின் தூய்மைகேடற்ற தேயிலை தொழில்

cri

தேயிலைக்கு சீன மக்களின் தேவை உயர்வதுடன், தரமான தேயிலையை அவர்கள் நாடுகின்றனர். தரத்தைத் தவிர, தேயிலையின் தயாரிப்பு முறை, விளையும் இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் அவர்கள் பெரும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், சீனாவின் தேயிலை தொழில் துறை பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.

நுகர்வோருக்கு தரமிக்க தேயிலை உற்பத்தி பொருட்களை வழங்கும் வகையில், தேயிலை உற்பத்தி தளத்தை மாசு இல்லாத உயரமான மலைப் பகுதியில் கவனம் செலுத்துவதாக தென் மேற்கு சீனாவின் யுன்நான் மாநிலத்திலுள்ள பூ ஏர் தேயிலை உற்பத்தி நிறுவனத்தின் பொறுப்பாளர் வாங் சியா அம்மையார் செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது—

Pu Er

"பூ ஏர் தேயிலையின் மூல பொருள், யுன்நான் மாநிலத்தில் அமைந்துள்ள உயர் மலையில் சாகுபடி செய்யப்பட்ட பழைய தேயிலைச் செடியில் பறிக்கப்படுகிறது. அது இயற்கையானது, பசுமையானது. கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எங்கள் பூ ஏர் தேயிலை நன்கு விற்பனையாகிறது" என்றார் அவர்.

வாங் சியா பொறுப்பேற்கும் தொழில் நிறுவனம் மேற்கொள்ளும் நிர்வாக செயல்முறையை, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள தேயிலை உற்பத்தி ஆலைகள் பின்பற்றுகின்றன. தேயிலை விளையும் தளத்தில், விவசாயிகளின் பணி முறைமைப்படுத்தப்படுகிறது. தேயிலைச் செடிக்கு மிகக் குறைவான உரத்தை பயன்படுத்தம்படி அவர்களிடம் கூறப்படுகிறது. இதனால் தேயிலை மாசுபடும் வாய்ப்பு குறைவு.

1  2  3