• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-03 13:35:12    
சென் நுங் ஜியா எனும் இயற்கைப் புகலிடம்

cri

ராட்சதப் பண்டா போலவே, அதுவும் சீனாவின் அரிய விலங்கு ஆகும். நாட்டின் கருவூலம் என அது அழைக்கப்படுகின்றது. 1980ஆம் ஆண்டு, சென் நுங் ஜியாவில் முதன்முதலாக இத்தகைய குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆம்டுகளுக்குப் பின், இங்கு இயற்கை புகலிடம் நிறுவப்பட்டது. இதனால் பொன்நிற ரோம குரங்கும் அவை தங்குமிடமும் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றன. 1982ஆம் ஆண்டு இங்கு 500 குரங்குகள் இருந்தன. 1998ஆம் ஆண்டில் 760 ஆக அது அதிகரித்துள்ளது. அழிவின் விலிம்பிலுள்ள இவ்விலங்கை காப்பாற்றும் வகையில், புகலிடத்தில் உலகில் முதலாவது பொன்நிற ரோம குரங்கின் செயற்கை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தளம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது என்று திரு சியெ தெங் பெங் தெரிவித்தார்.

இங்கு புகலிடம் உருவாக்கப்பட்ட பின், இம்மண்டலத்தில் வேறுபட்ட பயன்பாட்டு பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மையப்பகுதியில், முற்றிலும் மூடப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடைமுறைக்கு வருகிறது. இதில் கண்காணிப்பும் ஆராய்ச்சியும் நடைபெறுகின்றன. சோதனை பகுதியில், அறிவியல் கள ஆய்வும் பாடம் சொல்லிக் கொடுத்தலும் நடைபெறுகின்றன. நிர்வாகப்பகுதியில், திட்டமிட்ட முறையில் தாவரங்களைப் பயிரிடலாம். அவற்றை வளர்க்க முடியும். தவிர, வேளாளர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைப் பிரதேசங்களும் நிலையாக்கப்படுகின்றன. சுற்றுலா பிரதேசமும் வரையறுக்கப்படுள்ளது.

இயற்கை புகலிடம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், இதற்கு நிதி தேவைப்படுகின்றது. 1996ஆம் ஆண்டு முதல், இயற்கை புகலிடத்தில் ஒரு பகுதி காட்சியிடம் சுற்றுலாத் தலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்புகலிடத்தில் இப்பணிக்குப் பொறுப்பான திரு சு ச்சௌ சுவான் எமது செய்தியாளரிடம் பின் வருவாறு கூறுகிறார்.

இயற்கை மூலவளத்தையும் சூழலையும் பயனுள்ள முறையில் பாதுகாக்கும் நிலையில், இயற்கை மூலவளத்தையும் இயற்கை காட்சிகளையும் இப்பிரதேசம் அறிவியல் முறையில் பயன்படுத்துகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலாவை வளர்ச்சியுறச் செய்வது, இப்புகலிடத்துக்கும் அதன் அருகிலுள்ள பொது மக்களுக்கும் மிகப் பெரும் நன்மை புரிந்துள்ளது.

புகலிடத்தின் நிர்வாகப் பணிக்கு பொறுப்பான சீன தேசிய வனத் தொழில் பணியகத்தின் அதிகாரி லியு தே வாங், சென் நுங் ஜியா இயற்கை புகலிடத்தில் சோதனை பயணம் மேற்கொண்டு திரும்பினார். பெய்ஜிங்கில் எமது செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில், அவர் பின் வருமாறு இந்த இயற்கை புகலிடத்தை மதிப்பிட்டார்.

1983ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், இப்புகலிடம் அதிக பணி புரிந்துள்ளது. பொது மக்களின் வாழ்வு பிரச்சினையை பயன்தரும் முறையில் அது தீர்த்துள்ளது. இதனால், இயற்கை மூலவளத்தின் மீதான சீர்குறைவு குறைக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆய்வுத்துறையிலும் நரிவாகத்தைப் பாதுகாப்பதிலும் அது குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளது. சென் நுங் ஜியா இயற்கை புகவிடம், சீனாவின் தேசிய நிலை இயற்கை புகலிங்களில், செல்வாக்கு உடைய ஒன்றாகும். அதிக சாதனை பெற்றுள்ள புகலிடமும் ஆகும்.


1  2