வான் சுன் சியா என்பவர் சீனாவின் விளையாட்டு அரங்கில் மட்டுமல்ல சீன மக்களிடையிலும் உலகிலும் கீழை மான் என அழைக்கப்படுகிறார். அவர் தமது தொலை தூர மாரதன் தான் ஓட்டப்பந்தயம் மூலம் இப்புகழ் பெற்றார். கீழை மான் சுன்சியா இயக்குநர் என்ற மாற்றம் பெற அவருக்கு 10 ஆண்டுகள் பிடித்தது. ஜனவரி 25ம் நாள் அவருடைய பெயர் சூட்டப்பட்ட உயல் நலனுக்காக ஓடுவோர் கிளப் சீனாவின் சன் சியான் நகரில் நிறுவப்பட்டது. ஓவன்ஸ் விருது பெற்ற ஒரேஒரு ஆசிய நாட்டவரான வுவான் சுன் சியா வெற்றிகரமாக அவருடைய தொழிலை மாற்றியுள்ளார். இது பற்றி அவர் செய்தியாளரிடம் கூறிய போது நாங்கள் உடல் நலனுக்காக ஓடுவோர் கிளப் நடத்துவதன் நோக்கம் வியாபாரம் இல்லை. மக்களை ஓடும்படி தூண்டுவது எங்கள் நோக்கமாகும் என்றார்.
கிளப் நடத்துவது உறுப்பினர்களிடமிருந்து லாபம் வெறுவதற்காக அல்ல என்பது மக்களுக்கு புதுமையாக உள்ளது. அப்படி இருந்தால் ஏன் உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வாங்க வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பெறுவது தான் நோக்கம் தான் என்று பொதுவாக கருதப்படுகின்றது. இது பற்றி வுவான் சுன் சியா கூறினார். லாபம் மட்டுமே நாங்கள் நாட வில்லை. நாங்கள் வசூலித்த பணம் உறுப்பினர்களுக்கே உடல்நலக் காப்பீட்டில் செலவிடப்படுகின்றது. ஆண்டு தோறும் அவர்களுக்கு உடல் சோதனை செய்ய உதவுகின்றோம். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும் என்று வுவான் சுன் சியா செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது எங்களுக்கு கிடைக்கும் பணம் உதவும் வணிகர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கூட்டானிகளிடமிருந்தும் கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக கிளப்பில் சேரும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இரண்டு தீஷட் ஷாங்காய் மெச்சியுன் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
1 2
|