அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அறிவியல் முறைப்படி அனைவருக்கும் பயிற்சி அளிக்கின்றோம். உடல்நலனுக்காக ஓடுவதை ஏன் தெரிவு செய்ய வேண்டும் என்று நான் அட்லான்ட்டா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய பின் பல்வேறு கோணங்களில் சிந்தித்து பார்த்தேன்ற். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் நகரங்களில் நான் இந்த பயிற்சியை அளிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் மக்கள் மிகவும் விரும்பி வரவேற்றனர். 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையான மக்கள் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். ஓடுவது உடல் நலவாழ்வுக்கு எப்படித் துணை புரியும் என்பது அனைவருக்கும் தெரியாது. விளையாட்டு துறையில் ஈடுபட்ட நான் இதை நன்றாக தெரிந்துள்ளேன். ஆகவே என்னுடைய அனுபவத்தை கொண்டு அறிவியல் முறைப்படி சரியான பொருளை மற்றவர்களுக்கு தருவது மிகவும் முக்கியம் என்று நான் அறிந்து கொண்டுள்ளேன். இந்த நடைமுறையாக்கத்தில் மாபெரும் வணிக வாய்ப்பு உள்ளது என்று வுவான் சுன் சியா கூறினார்.
சன்யியான் நகரில் வுவான் சுன் சியா உடல்நலனுக்காக ஓடுவோர்க கிளப் நிறுவுவது என் லட்சியத்தில் முதலாவது நிறுத்தமாகும் என்று அவர் நேர்மையாக தெரிவித்துள்ளார். சீனாவின் நகர மக்களின் உடல் நிலையை பார்த்தால் மக்களிடையில் குறிப்பாக உயர் நிலை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையில் உடல் நலன்நிலை தரம் தாழ்ந்து காணப்படுகின்றது. 90 விழுக்காட்டினரின் உடல் நலம் வலிமையற்ற நிலையில் உள்ளது. அவர்களை ஓட வைத்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும். இந்த சிந்தனையுடன் புத்தாண்டில் வுவான் சுன் சியா நாடு முழுவதும் உடல் நலனுக்காக ஓடுவதற்கு பல ஓட்டப்பந்தயங்களை நடத்துவார். கிளப் என்பது ஒரு மன்றம். மேலும் கூடுதலான மக்கள் தம்மைப் போல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது வுவான் சுன் சியாவின் நோக்கமாகும். 1 2
|