சான் ஜின் அம்மையார், வட சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பொ தௌ நகரில் ஒரு இடை நிலைப் பள்ளி ஆசிரியையாவார். 1996ம் ஆண்டு அவர் மாணவர் மனோ பலம் பற்றிய ஆலோசனை வழங்குதல், மற்றும் உதவி பணியில் ஈடுபடலானார். இப்போது மனோ பல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாணவர்களுக்கு உதவிடும் சிறந்த முறையை அறிந்துக் கொண்டார். "ஒரு மாணவர் வீடு எங்கள் பள்ளியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ளது. அவர் எங்கள் பள்ளியில் சேர்ந்த பின் அவ்வளவாக யாருடனும் பழக வில்லை. கூறிப்பாக மாணவர்களுடன் பழகுவதில் சில பிரச்சினைகள் இருந்தது. அவருடைய கூற்றைக் கேட்ட பின்"நீ தனிமைப்பட வில்லை. என்னை உன் நண்பராக எடுத்துக் கொள். இனி விஷயம் இருந்தால் என்னை தாராளமாக வந்து பார் என்றார் அவர்."
1 2