உலகில் உள்ள மக்கள் 27 விழுக்காட்டினருக்கு உறக்கக் கோளாறுகள் இருப்பதாக உகல சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. இதனால் அக்கறை கொண்ட சர்வதேச மனநலன் மற்றும் நரம்பியல் ஆய்வுக் கழகம் மார்ச் 21ம் நாளை உலக உறக்க நாளாக அறிவித்து தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மனிதர்கள் தூங்க முடியாத ஒரு நிலை ஏன் ஏற்படுகின்றது?மனச் சோர்வு, கூச்சல் மற்றும் இரைச்சல், பக்கத்தில் படுத்திருப்பவர் விடும் குனட்டை ஒலி இவை காரணமாக நடு இரவில் நமது தூக்கம் கலைந்து திடுக்கிட்டு கண்விழித்து பேந்தப் பேந்த முழிக்கிறோம். சீனாவிலே சீன உறக்க ஆராய்ச்சிச் சங்கம் அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. நகர வாசிகளில் 40 விழுக்காட்டினருக்கு இந்த உறக்கக் கோளாறு இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பலருக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் நினைத்தவுடன் தூங்கிவிடக் கூடிய ஒரு மிகையான போக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
1 2