• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-14 13:50:26    
லோப இன மக்கள் பேரவை பிரதிநிதி-ஸியோ ஹொங்

cri

லோப இன மகளிர்

ஸியோ ஹாங்கின் மூன்று அண்ணன்களும் பள்ளி போகும் வாய்ப்பை பெறவில்லை. இப்போது உள்ளூரில் வேளாண்மை வேலையில் ஈடுபடுகின்றனர். அவரது தமக்கையும் அவரும் கட்டாயக் கல்வி பயின்றனர். இது மட்டுமின்றி, அவர்களுடைய உணவு உடை பிரச்சினைக்கும் அரசு பொறுப்பேற்கின்றது. முன்னோடிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில், லோப இனத்தவர்களின் இன்றைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார். அவர் கூறுகிறார்:

"வாழ்க்கை முறை பெரிதும் மாறி விட்டது. முன்பு, லோப இன மக்களின் வாழ்க்கையும் பழக்க வழக்கங்களும் பின்தங்கிய நிலையில் இருந்தன. எடுத்துக்காட்டாக, திருமணமாகும் போது, விருந்துக்காக வீட்டில் உள்ள கால்நடைகள் அனைத்தும் கொல்லப்படும். இப்போது அப்படி இல்லை. தற்போது, லோப இன மக்களின் உறைவிட மற்றும் சுகாதார வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளன." என்றார்.

மிங் லின் நகர லோப மக்கள், இப்போது மலைகளிலிருந்து வெளியேறி போக்குவரத்து வசதிமிக்க சமவெளி பிரதேசத்தில் குடியேறினர். அரசின் நிதியுதவியுடன், ஏழைக் குடும்பங்கள் வீடு கட்டின. உற்பத்தி சாதனங்களும் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும், வட்டத்திலுள்ள 11 லோப இன குடும்பங்கள் புதிய வீடுகளைக்கட்டுவதற்கு உதவியாக, அவர் மேல் நிலை அரசிடம் 4 லட்சம் யுவான் நிதிக்கு விண்ணப்பம் செய்தார்.

லோப இன மகளிர்

நயிலோப வட்டம், மிங் லின் மாவட்டத்தின் ஒரே ஒரு லோப இனத் தன்னாட்சி வட்டமாகும். இவ்வட்டம் வறுமையை ஒழிப்பதற்கு உதவியாக, உள்ளூர் அரசு, கடந்த ஆண்டில் வட்ட அரசை, மலையிலிருந்து முக்கிய போக்குவரத்து பாதைக்கு அருகில் மாற்றி, அலுவலகத்தையும் மக்கள் வசிப்பிடங்களையும் புதிதாகக் கட்டியது. இவ்வீடுகள், முன்னதாக கட்டியமைக்கப்பட்ட சில லோப இன கிராமங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டன. அவற்றில் 500க்கும் அதிகமான லோப இனத்தவர்கள் வாழ்கின்றனர். எழிலான இயற்கை சூழல், லோப இனத்தின் தனிச்சிறப்பான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு நயிலோப வட்டம் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளது. கிராமவாசிகள், பயணிகளுக்காக பாரம்பரிய நடனமாடி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.

விவசாயிகள் மற்றும் ஆயர்களின் இன்னல்களை கூடிய அளவில் தீர்க்கும் பொருட்டு, நேரம் கிடைக்கும் போது கிராமத்துக்குச் சென்று பார்ப்பது அவருக்கு வழக்கமாகி விட்டது. உள்ளூர் மக்கள், சாலைபோடுவது, சுற்றுலா வளத்தை பயன்படுத்துவது முதலியவற்றில் பெரும் அக்கறை காட்டுகின்றனர். தன்னால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி என்ற முறையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திடமும் அரசின் தொடர்புடைய வாரியங்களிடமும் நிலைமை விளக்கிக்கூறுவேன். சில வேளைகளில், ஆண்டுதோறும் பெய்சிங்கில், தேசிய மக்கள் பேரவை ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இதர பிரதிநிதிகளுடன் இணைந்து, சட்ட முன் வரைவு என்ற முறையில் நிலைமையை தெரிவிப்பேன் என்று அவர் சொன்னார். கடந்த சில ஆண்டுகளில் அவர் சமர்ப்பித்த சட்ட முன் வரைவுகளனைத்தும் கையாளப்பட்டன. பல பிரச்சினைகள் உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டு விட்டன.

1  2  3