• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-28 21:29:48    
சீனாவில் மக்கள் தொகை குறைவான மாவ் நன் தேசிய இன வாழ்க்கை

cri

மாவ் நன் இளைஞர்கள்

சீனாவின் பெருமளவிலான மக்கள் தொகையில், இந்த 22 சிறுபான்மை தேசிய இனங்களின் விகிதம் மிகமிகக் குறைவு என்ற போதிலும், அரசு அவற்றுக்கு மேலும் அதிகமான ஆதரவும் சலுகையும் வழங்கியிருக்கின்றது. 2004ம் ஆண்டு, ஷாங்காயில் வறுமை ஒழிப்பு பற்றிய உலக மாநாட்டில், சீனத் தலைமை அமைச்சர் வெங் சியாங் பாவ் உரையாற்றுகையில், "மக்கள் தொகை குறைவான 22 சிறுபான்மை தேசிய இனங்கள் வாழும் பிரதேசங்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்காக, அங்கு, வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை வழங்கி பாடுபடுவோம்" என்று வாக்குறுதி அளித்தார். ஆகஸ்ட் திங்களின் இறுதியில், குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனத்து வளர்ச்சிக்கு ஆதரவான திட்டத்தை அரசவை பரிசீலித்து அங்கீகரித்தது. 2005 முதல் 2010 வரையான ஐந்தாண்டுகளுக்குள், இந்த 22 சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இத்திட்டம் வகுக்கின்றது.

தற்போது, தேசிய இன விவகார கமிட்டி, தேசிய வளர்ச்சி சீர்திருத்தக்கமிட்டி, நிதி அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் தொகை குறைவான தேசிய இன வளர்ச்சி பணிக்கு ஆதரவாக பலவகைகளிலும் ஏற்பாடு செய்துள்ளதாக, சீன தேசிய இன விவகார கமிட்டியின் துணை தலைவர் யாங் ஜின் ச்சிக கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது:

"இதற்கு முக்கியமாக, கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது. பொருளாதாக கட்டமைப்பைச் சரிப்படுத்தி, பொது மக்கள் கூடுதலான வருமானம் பெற வழிகாட்டுவது, அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, சுகாதாரம், பண்பாடு முதலிய சமூக லட்சியத்தை அடைய, சமூக முன்னேற்றத்தை தூண்டுவது, திறமைசாலிகளுக்கு பயிற்சியை வலுவாக்கி, இந்தச் சிறுபான்மை மக்களின் கல்வியறிவை உயர்த்துவது ஆகியவை இந்த ஏற்பாடுகளாகும்." என்றார், அலர்.

மாவ் நன் இன நங்கைகள்

மக்கள் தொகை குறைவான தேசிய இனங்கள் வாழும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட, அடுத்த ஐந்தாண்டுகளில் 100 கோடி யுவான் செலவிடுவதென சீன அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், நிதி அமைச்சும், மத்திய வங்கியும், நிதி திட்டப்பணி மற்றும் கொள்கையில், இக்கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளன. இவ்வினங்களின் இருப்பிடங்களில், அடிப்படை வசதி மற்றும் உற்பத்தி வாழ்க்கை நிலைமைப் பிரச்சினைகளை வேரோடு களையும் வகையில், மின்வசதி, போக்குவரத்து, தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி, மக்களுக்கும் கால் நடைகளுக்கும் குடிநீர், பொது மக்களின் உறைவிடம் முதலியவற்றில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களில் தற்போது, இன்னமும் சுமார் இரண்டு லட்சம் ஏழைகள் இருக்கின்றனர். மேற்கூறிய கொள்கை நடவடிக்கை தவிர நிதியுதவியையும் அரசு அதிகரிக்கும். மூலவள மேம்பாட்டை வெளிக்கொணர்வது, தூய்மையான உணவுப் பொருட்களையும், தனித்தன்மை வாய்ந்த விவாய உற்பத்திப் பொருட்களையும் பயிரிடுவது, சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றில் இந்த ஏழைகள் உதவி பெறுவர்.

1  2  3