• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-09 17:12:51    
சுங்சின் நகரில் சாலை ஓரங்களில் ஹோ கோ உணவு

cri
சுங்சின் நகரம் சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமாகும். அழகான இயற்கை காட்சி அங்கே இருப்பாலும் மட்டுமல்ல, ஹோ கோ எனப்படும் உணவினாலும், இந்நகரம் ம் உலக் புகழ் பெற்றுள்ளது. இன்று சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சுங்சின் மக்களின் வாழ்க்கையில் இருந்து, பிரிக்க முடியாத ஹோ கோ உணவு பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

சுங்சின் நகரில் சாலை ஓரங்களில் ஹோ கோ உணவு விடுதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. யூ சுன் என்னும் பகுதி சுங்சின் நகரின் ஹோ கோ உணவு விடுதிகள் நிறைந்த இடமாகும். இதன் நிலப்பரப்பு 9 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால், இங்கே சுமார் 3000 ஹோ கோ விடுதிகள் உள்ளன. 42 வயதான லை மிங் என்பவர் சிறு வயது முதலே இங்கு வசிக்கின்றார். அவருக்கும் மனைவிக்கும் பணிச் சுமை அதிகம். மகன் உயர் நிலை பள்ளியில் பயில்கின்றார். வாரத்துக்கு குறைந்தது 2, 3 இரவுகளில் அவர்கள் ஹோ கோ உணவு விடுதியில் சாப்பிடுவர். வாரத்தின் இறுதியில், சில சமயத்தில் லை மிங் வீட்டில் ஹோ கோ தயாரித்து, நண்பர்களுக்கு விருந்து அளிக்கின்றார். இது பற்றி அவர் கூறியதாவது,

சுங் சின் நகரில் 40 ஆண்டுகளாக வசிக்கின்றேன். ஹோ கோ எனக்கு மிகவும் விருப்பமான உணவாகும். நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும் ஹோ கோ வாணலியை சுற்றி உட்கார்ந்து உண்டதும், அளவின்றிப் பேசுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றது என்றார் அவர்.

ஹோ கோ என்பது, அடுப்பின் மேல் வாணலியை வைத்து, கொதிக்கின்ற சூப்பில் இறைச்சி, காய்கறி ஆகியவற்றைப் போட்டு, வேகவைத்த பிறகு, மசாலாவை தொட்டு, உண்ணும் வகையாகும். சுமார் 16வது நூற்றாண்டில், குறிப்பிட்ட வசிப்பிடம் இல்லாத மீனவர்கள் யாஞ்சி ஆற்றின் கரையோரத்தில் தங்கியிருந்த போது, இந்த உணவு முறையைக் கண்டுப்பிடித்தனர். சுங்சின் நகரம் ஈரமான இடமாகும். குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கின்றது. நீரில் வாழும் இந்த மீனவர்கள், கற்களால் அடுப்பை மூட்டி, அதன் மீது வைத்த வாணலியில், உப்பு, மிளகாய், ஆகியவற்றை ஊற்றி, சூப் தயாரித்தனர். இறைச்சியையும் காய்கறிகளையும் சூபில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டனர். இந்த உணவு குளிரையும் ஈரத்தையும் தாக்குப் பிடிக்க உதவுகின்றது. பிறகு, இத்தகைய உணவு வகை மேன்மேலும் பரவலாகி, இன்றைய ஹோ கோவாக மாறியுள்ளது.

1  2