 தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய் பெண் உடலின் இயற்கை நிகழ்வான உதிரப் போக்குக்குத் தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத் தான் எத்தனை (மூட) நம்பிக்கைகள், பயங்கள்.
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும். குளித்தால் சளி பிடிக்கும். காயம் படும். கனமான பொருட்களை தூக்கக் கூடாது. பூக்களைத் தொட்டால் வாடிவிடும். வயல் வெளியே சென்றால் பயிர் கருகிவிடும். தனி தட்டில் தான் சாப்பிட வேண்டும். தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நுமையக் கூடாது. சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும். இப்படி பல கூடாதுகள்.
கிராமப்புறத்தில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைக்க வேண்டும்.
1 2 3 4
|