• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-18 13:32:01    
நோய் இல்லாத ஒரு விசித்திரமான கிராமம்

cri
இத்தாலியின் அல்பஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பாவு இனத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் ரத்த உறவு உள்ளது. அவர்கள் நோய்வாய்ப்படுவது மிக அரிது. அவர்களுடைய உணவுகளில் அதிக அளவு cholesterol நிலவிய போதிலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகிய நோய்களால் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை. இந்த விசித்திரமான கிராமம் உண்மையாகவே நிலவுகின்றது. அதனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பின், பல்வகை நோய்களை எதிர்த்து நிற்கும் பல மரபணுக்களை கண்டறிந்தனர்.

பாவு இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக, ஸ்டோகரேடோ கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 400 பேர் உள்ளனர். அவர்களில் 95 விழுக்காட்டினோர் ஒரே குடும்பப் பெயரை பயன்படுத்துகின்றனர். இந்த கிராமம், ஆண்டுமுழுவதும் உறைப்பனியால் மூடப்படும் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், இதற்கும் வெளிப்புற உலகத்திற்கும் தொடர்பு ஏதுமில்லை. இதன் விளைவாக, கிராமவாசிகள், ஒரே குடும்பத்தினரிடையில் திருமணம் என்ற நிலை நிலவிவருகின்றது. இந்த வழக்கம், 20வது நூற்றாண்டின் துவக்கத்தில் வாத்திகான் வெளியிட்ட ஒரு புனித கட்டளைக்கு புறம்பானது பாதுகாக்கப்படுகின்றது. இந்த திருமண வழக்கத்தினால், குடும்பத்தினரின் மரபுவழி கிராமம் ஒன்று உருவாகியுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  

இத்தாலியின், அரிதான நோய்களை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர் ஹெராதேனிக்.வுரோஷ் பேசுகையில், பொதுவாக இந்த வழக்கத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால், ரத்த உறவுடையவர்களுக்கிடையில் நடைபெறும் திருமணம், மரபு தகவல்களை சீர்குலைக்கும். ஆனால் இந்த கிராமத்தில் உள்ள எவருக்கும் இத்தகைய பிரச்சினை ஏற்படவில்லை என்ற ஒரு வியக்கத்தக்க முடிவை, நாங்ள் ஆய்வுமூலம் கண்டறிந்துள்ளோம் என்று கூறினார். 

வசிக்கும் சூழ்நிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஸ்டோகரேடோ கிராமவாசிகளுக்கு நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்த நோய் ஆகிய நோய்களுக்கு எதிரான ஒரு வகை சிறப்பு எதிர்ப்பு சக்தி உண்டு என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

1 2