காலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம்.
காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதுமில்லாத அளவு இன்று உலகு தழுவிய அளவில் காணப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உலக வெப்ப ஏறலின் தீமையான விளைவுகள் மற்றும் தாக்கங்களை குறைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கிடை குழு என்ற சர்வதேச வல்லுநர் குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி. 1 2 3
|