"சமீபத்துல தோண்டுறப்பதான் இது கிடைச்சது. இது ஒருத்தர் கிட்ட இருந்தா அதிர்ஷ்டம். ஹன் வமிச காலத்தைச் சேர்ந்தது. இதுல இருக்கற பாதரசக் கறையைப் பாருங்க..."
உடனே பல தலைகள் அந்தக் கல்லை மொய்த்துக் கொண்டு, பாதரசக் கறையைப் பார்க்கத் துடித்தன. வெய்யும் அதில ஒருவர் என்று சொல்லணுமா? அந்த வீட்டில் பல பிள்ளைகள் இருந்தனர். அவர்களை அய்கு சரியாகக் கவனிக்கவில்லை. ஏழாவது முதலாளிக்கு முன்னால் அவர்கள் தட்டையான மூட்டைப் பூச்சிகளைப் போலத் தென்பட்டனர். முதலாளி கண்ணில் பட்டுவிடப் பயந்து ஓடி ஓடி ஒளிந்தார்கள்.
அவர் சொன்னது எதுவும் அவளுக்குப் புரியவில்லை.
பாதரசக் கறை பற்றி அவளுக்கு அக்கறை இல்லை. ஆகவே சுற்றி முற்றிப் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் கதவோரமாக சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தது கிழட்டு மிருகம். கூடவே சின்ன பிசாசும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு பார்வையிலேயே அவர் களைப் புரிந்து கொண்டு விட்டாள். ஆறு மாசத்துக்கு முன்னாடி பார்த்தப்ப இருந்ததைவிட இப்போது அவர்களுக்கு வயதானது போல தெரிந்தது. பாதரசக் கறையைப் பார்த்த கூட்டம் கலைந்தது. குத அடைப்புக் கல்லைக் கையில் எடுத்துத் தடவியபடியே, வெய் தரும்பிப் பார்த்து சுவாங் மு-சனிடம் கேட்டார். 1 2
|