• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-12 16:34:56    
காணாமல் போன பூமியின் மேலடுக்கு பகுதி

 


cri

மனிதர்கள் கழிவுகளாக வெளியேற்றும் பொருட்களும், நகரவாசிகள் அறிந்தும் அறியாமலும் குளியலறைகளில் தவறவிடும் பொருட்களும் சென்று சேரும் இடம் பொதுவாக கடல்தான். கடலுக்குள் இயற்கை நமக்களித்த எத்தனையோ செல்வங்கள் தவிர, கடற்கரைக்கு காற்று வாங்க வந்து வழியில் வாங்கிய இனிப்பு காரம், பட்டாணி சுண்டல் எல்லாம் பொதிசெய்திருந்த காகிதங்களும், பிளாஸ்டிக் உறைகளும், விளையாட்டாய் வீசியெறியும் பொருட்களும், தவறவிடும் காலணிகளும் என பலவற்றைக் காணலாம். கடல் நீரின் ஆழத்தில் சென்றால் இன்னும் பல பொருட்களை கண்டெடுக்கலாம். கடலுக்குள் சென்று ஆராய்ந்து பார்த்தாலும், கடற்கரையோரத்தில் நடந்து சென்றாலும் இயற்கையும் செயற்கையுமாக அலைகழித்து விடப்பட்ட பல பொருட்களைக் காணமுடியும் என்பது மீனவர்களுக்கும், கடலோரக் காற்றுக்கு மனதை தொலைத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் தெரியும்.

ஆக கடலுக்குள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அரபிக்கடலோ, செங்கடலோ, இந்து மாக்கடலோ பெயர்களால் வேறு பட்டாலும் இந்த கடல் என்ற நீர்தான் பூமிப்பந்தின் பெரும்பான்மையை பிடித்துள்ளது.

சிறுவயதிலிருந்தே நமக்குச் சந்தேகங்கள் அதிகம் எழுவதுண்டு. கேள்வி கேட்டு ஒன்றேல் ஆசிரியருக்கு அப்போது பதில் தெரியாததால் நமக்கு அடி, அல்லது கேட்கப்படும் கேள்வி வகுப்பை குழப்படிக்கவே செய்யப்படுகிறதோ என்று ஆசிரியர நமது பகுத்தறிவு வேட்கையின் மீதான சந்தேகத்திலும், குறும்புக்கார பையன் அவன் என்று சொன்ன சக ஆசிரியரின் குரல் தனக்கு நினைவில் வந்த காரணத்திலும் நமக்கு அடி. ஆக இப்படி அடி வாங்கியும் வாங்காமலும் சந்தேகம் தீராமல் கிடந்த கேள்விகளில் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். பூமியின் பெரும்பாலான பகுதி நீர் என்று சொல்கிறார்கள், நீருக்கு அடியில், ஆழத்தில் நிலம்தானே பிறகு எப்படி பெரும்பகுதி நீர் என்று சொல்லலாம்?

1 2 3