• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-12 16:34:56    
காணாமல் போன பூமியின் மேலடுக்கு பகுதி

 


cri

சுனாமி, ஆழிப்பேரலை ஏற்பட்ட பிறகு நம்மில் பலருக்கு இந்த புவித்தளத்தட்டுகள் பற்றி பரவலாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

பூமியை ஆப்பிள் போல குறுக்காக வெட்டி பார்த்தால் நான்கு படிவங்களாக அல்லது அடுக்குகளாக பூமி அமைந்திருப்பதைக் காணலாம். பூமிக்கு அடியின் மையமாக உள்ள உட்கரு, சுமார் 1200 கி மீ விட்டம் கொண்டது. அதற்கு மேலே வெளிக்கரு அடுக்கு இது திரவ நிலையில் காணப்படுகிறது. அதற்கு மேல்தான் இந்த வெப்பமான திரவத்தை காக்கும் கவசப்பகுதி, அதற்கு மேல் புவியின் மேலடுக்கு. புவியின் உட்கருவின் வெப்பநிலை சூரியனின் மேற்பகுதியை விட வெப்பமானது. இந்த உட்சூட்டினால் மேற்கரு மற்றும் கவசப்பகுதியிலான பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன. புவிக்கடியிலான பொருட்களின் அசைவால், நகர்வால் மேலடுக்கு மற்றும் கவசப்பகுதிகள் அடங்கிய புவித்தளத்தட்டுகள் புவியின் மேற்பரப்பு நோக்கி நகர்கின்றன. இந்த புவித்தளத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அதன் விளைவாக, நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் சீற்றத்தை நாம் காணலாம்.

ஆக பூமி அல்லது புவியின் செயல்பாடு, அதன் தன்மை பற்றி இப்போது அறிவியலர்களுக்கு ஏற்கனவே இருந்த புரிதல்களும் புரியாமல் போக, பகுத்து அறியும் மனிதகுலத்தின் வேட்கையின் விளைவாக அறிவியலர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் இறங்கியுள்ளனர். இந்த குறிப்பிட்ட அட்லாண்டிக் கடலடிப்பகுதியில் காயமடைந்து காணப்படும் புவிப்பரப்பையும், காயத்தால் கண்களுக்கு தெரியும் பொதுவாக சில ஆயிரம் மீட்டர்களுக்கு அடியில் உள்ள கவசப்பகுதியையும் கள ஆய்வு செய்ய 20 பேர் கொண்ட பிரிட்டன் நாட்டு அறிவியலர்கள் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

முன்னர் குறிப்பிட்ட இந்த புவித்தளத்தட்டுகளின் மோதுதலின் விளைவாக இப்படி இந்த காயமேற்பட்டு, புவி மேலடுக்கு காணாமல் போனதா? அல்லது இந்தப்பகுதியில் புவி மேலடுக்கு பகுதி தோன்றவே இல்லையா?

இந்த கேள்விகள் ஒரு புறம் என்றால், தற்போதைய ஆய்வுகளுக்கு அறிவியலர்களை உந்தித்தள்ளியது, இனியும் புவி எப்படியெல்லாம் பரிணமிக்க போகிறது என்பதை ஆறியும் ஆவலாகும். பல சதுர கீலோமீட்டர்கள் பரந்துள்ள இந்த புவியின் மேலடுக்கு இல்லாத, பூமியின் காயம் என அழைக்கப்படும் பகுதி குறித்து பிரிட்டன் சவுதேம்ப்டன் தேசிய கடலாய்வு மைத்தின் மூத்த ஆய்வாளரும் அறிவியலருமான பிராம்லி மர்ட்டன் குறிப்பிடும் போது, கடலுக்கடியிலான பூமிபரப்பில் இன்னும் பல மில்லியன் சதுர கிலோமீட்டர் கடலடிப்பகுதி காணாமல் போயிருக்கலாம் என்பதை தற்போது அறிவியலர்கள் உணரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்.

சரி இப்படி புவியின் மேலடுக்கு பகுதி இல்லாமல் புவிக்கடி அடுக்குகள் சிரிக்க கிடக்கிறதே இதனால் ஏதும் ஆபத்தில்லையா என்றால். இது இயற்கையாக நிகழ்ந்தது, இயற்கையின் பரிணமிப்பில் ஒரு பகுதியாத்தான் இது அமைந்துள்ளது. ஆனால் இந்த அகன்ற புவியின் தன்மை மற்றும் எப்படி இந்த உலகம் என்ற பூமிப்பந்து இப்படியாக ஒர் தோற்றம் பெற்றது என்பதையெல்லாம் ஆய்ந்தறிவது அவசியமானது. இன்னும் எத்தனை அதிசயங்கள் இயற்கையில் புதைந்துள்ளதோ, யாருக்கு தெரியும்.


1 2 3