ஒருங்கிணைப்பாளர்
இது வரை, Shi Jia Zhuang நகர் முழுவதிலும் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடியிருப்புப் பகுதி இணக்க அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒருங்கிணைப்பாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் இணக்கப் பணியில் ஈடுபடுகின்றனர். Shi Jia Zhuang நகராட்சி இணக்கக் கமிட்டியின் பொறுப்பாளர் ஒருவர் பேசுகையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள பொருளாதார அமைப்புகள், வர்த்தக சந்தைகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சென்று பிரச்சினைகள் ஏற்பட்டால், இணக்கம் செய்து வைக்கின்றனர் என்றார்.
தற்போது, குடியிருப்பு பகுதி இணக்கம், Shi Jia Zhuang நகரின் பிரபல பொது மக்கள் முரண்பாட்டையும் சர்ச்சையையும் தீர்க்கும் முதலாவது தெரிவாக மாறியுள்ளது. தவிர, அடி மட்ட ஊழியர்களுக்கு புதிய பணிக் கருத்தை இது ஏற்படுத்தியுள்ளது. Shi Jia Zhuang நகராட்சி நீதி சட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் Jia Xiang Ting கூறியதாவது:
"குடியிருப்புப் பகுதி இணக்கம், அடிப்படை பங்கு ஆற்றியுள்ளது. "சுமூகம் அரிதானது" என்னும் சீனத் தேசத்தின் பாரம்பரிய ஒழுக்க நெறிக்கு இது பொருந்தியது. சட்டம் தொடர்பான வழக்குகளைக் குறைத்து, முரண்பாட்டைத் தீர்க்கும் நோக்கத்தை நனவாக்கலாம்" என்றார், அவர்.
குடியிருப்பு பகுதி இணக்க அலுவலகத்தை நிறுவுவது, அயலவர்களுக்கிடை சுமூக நிலைக்கும், பாதுகாப்பான குடியிருப்பு பகுதியின் உருவாக்கத்துக்கும் சாதகமானது. இது மட்டுமல்ல, நீதி சட்ட ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பின் பங்கினை இது மேம்படுத்தியுள்ளது. 2005ஆம் ஆண்டில், Shi Jia Zhuang நகர் முழுவதிலும், பொது மக்களின் 90 ஆயிரத்துக்கு அதிகமான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதி இணக்கத்தின் வெற்றி விகிதம் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, வெற்றி விகிதம் மேலும் உயர்ந்தது. அடி மட்டத்தின் குடியிருப்பு பகுதி இணக்க அலுவலகங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. Jia Xiang Ting அம்மையார் கூறியதாவது:
"குடியிருப்பு பகுதி இணக்க முறைமை நிறுவப்படும் போது, சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ள மக்களுக்கிடை சர்ச்சை மேலும் செவ்வனே தீர்க்கப்படலாம். அவர்களுக்கிடை சர்ச்சை தீவிரமாகாமல் தவிர்க்கப்படலாம். "சுமூகத்தை அரிதான ஒன்றாக" மக்கள் கருதி, சமூகத்தின் இணக்கத்தைத் தூண்டுவார்கள்" என்றார், அவர்.
தற்போது, குடியிருப்புப் பகுதி இணக்க அலுவலத்தின் உருவாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வேளையில், பல்வகை சமூக முரண்பாடுகளை உரிய முறையில் தீர்க்க, மேலும் முழுமையான திட்டத்தை Shi Jia Zhuang நகர் வகுத்துள்ளது. பொது இடர்காப்பு மீதான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை மேற்கொள்வது, குடியேறும் மக்களுக்கு மேலதிக, மேலும் தரமிக்கச் சேவையை வழங்குவது, அவர்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனை உரிய முறையில் பேணிக்காப்பது ஆகியவை இதில் அடங்கும். இந்நடவடிக்கைகளினால், எதிர்காலத்தில், Shi Jia Zhuang நகரவாசிகளின் வாழ்க்கை மேலும் இணக்கமாகும் என்று எதிர்பார்க்கலாம். 1 2
|