இன்றைய தகவல் யுகத்தில், சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்துக்களின் தகவல் மயமாக்கப் பணியைத் தூண்டுவது, சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்களின் முக்கிய பணிகளின் அம்சங்களில் ஒன்றாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகால ஆய்வின் மூலம், சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்துக்களின் தகவல்மயமாக்கப் பணியில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. பலவகை சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களின் தகவல் தொழில் நுட்பத்துக்கு தேசிய நிலை வரையறை வகுக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கான மென் பொருள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பகுதி மென் பொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. சீனாவின் சீன மொழி தகவல் கழகத்தின் நிபுணர் Hua Shao He எடுத்துக்கூறியதாவது:
"கணிணியில் சிறுபான்மை தேசிய இன எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவது துவங்கியுள்ளதென்று கூறமுடியும். செல்லிட பேசியில் சிறுபான்மை தேசிய இன எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவது, இதுவே முதன்முறையாகும்" என்றார்.
சிறுபான்மை தேசிய இன மக்கள், சொந்த இன எழுத்துகளுடைய மென் பொருள் பொருத்தப்பட்டுள்ள செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி, அடிக்கடி குறுந்தகவலை அனுப்புவதும் பெறுவதும், தேசிய இன எழுத்துக்களை பயன்படுத்துவதற்கான அவர்களின் திறனை உயர்த்த முடியும். சிறுபான்மை தேசிய இன மொழி-எழுத்துகளை கையேற்று வளர்ப்பதை விரைவாக்க முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார். Wang Dao தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனத்தின் தலைமை மேலாளர் சாங் எ அதே கருத்தினைக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
"கணிணியில், நாள்தோறும், சொந்த இனத்தின் எழுத்துக்களைப் பயன்படுத்த முடியுமானால், காலப்போக்கில், இவ்வினத்தின் மொழி நிலைநிறுத்தி வளர்க்கப்படுவதற்கு உந்துவிசை பங்கு ஆற்ற முடியும். சிறுபான்மை தேசிய இனங்கள், தத்தமது இனத்து மொழி-எழுத்துக்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தால், படிப்படியாக நன்கு தெரியாமல் போகும் என்பது உறுதி. நாள்தோறும் அவற்றைப் பயன்படுத்தினால் தான், மேலும் நன்கு தெரிந்து கொள்ள முடியும்" என்றார், அவர்.
இது வரை 19 சிறுபான்மை தேசிய இனத்து எழுத்துக்கள் அரசின் ஒப்புதலுடன் பயன்படுத்தப்படுகின்றன. பரவலாகின்றன. செல்லிட பேசியில் பயன்படும் இதர சில சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களுடைய மென் பொருட்களை இக்கூட்டு நிறுவனம் தொடர்ந்து ஆராய்ந்து தயாரிக்கவுள்ளதாக, அதன் பொறுப்பாளர் தெரிவித்தார். 1 2
|