இது தொழில்நுட்ப ரீதியில் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இந்தச் சாதனையை குறைந்த செலவில் குறுகிய காலாத்தில் சீனா தனக்கும் உரித்தாக்கியுள்ளது. 8 ஆண்டுகால ஆய்வில், 50 கோடி யுவான் நிதித்தொகையில் இந்த் ஐயற்கை வாயு ஹைட்ரேட்களை கண்டறிந்த நான்காவது நாடாக சீனா மாறியுள்ளது.
அண்மையில் கண்டறிந்து, எடுக்கப்பட்ட இந்த இயற்கைவாயு ஹைட்ரேட் படிகங்களின் இரு மாதிரிகள் 99.7, 99.8 விழுக்காடு மீத்தேன் கலவையுடன் உள்ளன. அதாவது உலகின் தூய்மையான இயற்கைவாயு ஹைட்ரேட் படிக வளம் நிறைந்த பகுதிகளீல் ஒன்றை சீனா கொண்டுள்ளது எனலாம். கடலின் அடியில் மட்டுமே காணப்படும் இந்த் ஐயற்கை வாயு ஹைட்ரேட் படிகங்கள், அவ்வள்வௌ எளிதில் அகழ்ந்து எடுக்கப்படவும் முடியாது, அவ்வளவு எளிதாக பயன்பாட்டிலும் இறக்கிவிட முடியாது. பிறகு என்ன இயற்கை வாயு ஹைட்ரேட் படிகம் , வெங்காயம்? என்ற சலிப்பு நமக்கு ஏற்படலாம் ஆனால் இந்த வளத்தின் பயனை நெடுநோக்கு சிந்தனையில் பார்ப்பவர்களுக்கு அப்படியல்ல.
சீன நிலவியல் ஆய்வுக்கழகத்தின் துணைத் தலைமை இயக்குனர், சாங் ஹாங்டாவ் இந்த் அபணியில் சிக்கலானத் தன்மையை அறிந்தவராய், மெல்ல மெல்ல, கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். வளர்ச்சியடைந்த நாடுகள் 2015ம் ஆண்டு வாக்கில் இந்த இயற்கை வாயு ஹைட்ரே படிக வளத்தை பயன்படுத்துவதாக கூறியிருக்க, சீனா எப்போது பயன்படுத்தும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று அமைதியாக சொல்கிறார் சாங் ஹாங்தாவ்.
தற்போதைய முக்கிய பணி, சீனக்கடற்பரப்பில் இந்த இயற்கை வாயு ஹைட்ரேட் வளம் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிவதாகும் என்று கூறும் சாங் ஹாவ்தாங்கின் கவனமான மனப்பாங்கிலும், அணுகுமுறையிலும் பொருள் இருக்கிறது. காரணம் இத்துறையிலான ஆய்வில் மற்ற 3 முன்னோடிகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவைவிட சீனா பின் தங்கியுள்ளது. அமெரிக்கா ஜப்பான் தவிர இந்தியாவும் கூட இந்த வளத்தின் ஆய்வு மற்றும் தேடல் பணியில் குறிப்பிடத்தக்க அளவு நிதியை முதலீடு செய்துள்ளது.
1 2 3
|