1420ம் ஆண்டு முதல், 1911ம் ஆண்டு வரையான 491 ஆண்டுகளில், மொத்தம் 24 பேரரசர்கள், இவ்வரண்மனையில் ஆட்சி புரிந்தனர். இதில் காணப்படும் பல்வகை கோயில்களின் எண்ணிக்கை, 9 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இக்கட்டுமானத்தின் மொத்தம் நிலப்பரப்பு, 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டரை எட்டுகிறது. அரண்மனை அருங்காட்சியகம், கொலுமண்டபம், பேரரசர்களின் உறைவிடம் இரு பகுதிகளால் அமைக்கப்படுகிறது. கொலுமண்டபம், பேரரசர் அரசியல் விவகாரத்தைக் கையாண்டு, முக்கிய விழாக்களைத் துவக்கிய இடமாகும். பேரரசர்களின் உறைவிடம், பேரரசர், பேரரசி முதலிய அரசக் குடும்பத்தினர் தங்கி, வழிபட்டு, விளையாடும் இடமாகும். ஒட்டுமொத்த கட்டமைப்பு, முன்பகுதியுடன் பின்பகுதியாக இணைக்கிறது. முந்திய மூன்று அரண்மனைகளும், பிந்திய மூன்று அரண்மனைகளும், இந்நகரத்தின் நடு கோட்டில் இருக்கின்றன. கம்பீரமாக இருக்கின்றன. இது, சீனாவில், தற்போதுள்ள பண்டைய கட்டிடங்களில், மிகப் பெரிய, மிக முழுமையான கட்டிடம் ஆகும். சீன பண்டையச் சிறப்பு வாய்ந்த கட்டுமானமும் உலகின் மிகப் பெரிய அரண்மனையும் ஆகும். 1 2
|