Xinhai புரட்சிக்குப் பின், 1925ம் ஆண்டு, பெய் ஹய், பூங்காவாக மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 1949ம் ஆண்டு, நவ சீனா நிறுவப்பட்ட பின், சீன அரசு, பெருமளவில் நிதி ஒதுக்கி, இதனை மேம்படுத்தியது. 1961ம் ஆண்டு, இது, சீன அரசவையால், முழு நாட்டின் முதலாவது தொகுதி முக்கிய தொல்பொருள் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
பெய் ஹய், சீனாவின் வரலாற்றுப் பூங்காக்களில் தலைசிறந்த கலை படைப்பு ஆகும். முழு பூங்காவின் நிலப்பரப்பு, 69 ஹெக்டர். Qionghua தீவு, கிழக்குக் கரை, வடக்குக் கரை ஆகிய காட்சிகளால், இது, முக்கியமாக இணைக்கப்படுகிறது. Qionghua தீவில், மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன. கோயில்களும் அரண்மனைகளும், எதிரும் புதிருமாக இடுக்கி நிற்கின்றன. மலையின் உச்சியில் நின்ற வெள்ளை கோபுரம் இப்பூங்காவின் அடையாளமாக மாறுகிறது. பெய் ஹய் பூங்கா, அனைத்து பூங்காக்களின் சிறப்பைக் குவிக்கிறது. வேறுப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட, ஒரே காட்சியை இது அளிக்கிறது. இது, சீனாவின் பூங்காக் கலைகளில் தலைசிறந்ததாகும். 1 2
|