• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-25 10:02:11    
பல்வகை ஊட்டச்சத்தான தானிய உணவுகள் உட்கொள்வது

cri
சீனாவில் மக்களின் வாழ்க்கை நிலை உயர்வதுடன், கோழி இறைச்சி, வாத்திறைச்சி, கடல் வன வகைகள் முதலியவை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களாக மாறியுள்ளன. ஆனால், சிறந்த fine உணவு வகைகளைக் கூடுதலாக உட்கொள்வதால், உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உயர் கொழுப்பு அளவு சர்க்கரை ஆகிய நோய் வாய்ப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றது. பல்வகை தானிய உணவுகளை அதிக அளவாக உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் முன்மொழிகின்றனர்.

அரிசி, கோதுமை ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு, வேறு தானிய உணவு வகைகளை உரிய அளவில் உட்கொள்வது உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பெய்ஜிங் யுனியன் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமனையின் நோயாளற் ஆய்வு ஊட்டச்சத்து துறையின் துணைத் தலைவர் yu kang கூறியதாவது

தானிய உணவு வகைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றைச் உட்கொண்டால், உடலுக்குள் இருக்கும் தீய பொருட்களை நீக்கலாம். கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைக்கலாம். மலம் வெளியேறுவதற்கு இது துணை புரியும் என்றார் அவர்.

பல்வகை தானிய உணவு வகைகள் பெற்றிருக்கும் ஊட்டச்சத்துக்களின் வகைகளும் அளவும் வேறுப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அரிசியில், lysine அமினோ அமிலம் குறைவு. ஆனால், கருங்கோதுமையில் இது அதிகம். அரிசியிலும் கோதுமை மாவிலும் வைட்டமின் B1 எனும் உயிர்ச்சத்து குறைவு. ஆனால், மக்காச்சோளம், buckwheat முதலியவற்றில் இது அதிகம். ஆகையால், இவற்றை ஒன்றாகச் சேர்த்து உட்கொண்டால், ஊட்டச்சத்துக்களின் பயனை அதிகரிக்கலாம்.

தவிர, பல தானிய உணவு வகைகளில் நலவாழ்வு பாதுகாப்பு பயன் உள்ளன. எடுத்துக்காட்டாக, திணையை உட்கொண்டால், இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு நன்மை தரும். மக்காச்சோளம், கருங்கோதுமை ஆகியவற்றில் sub-oleic அமிலம், citric அமிலம் அதிகமாக உள்ளன. இவற்றுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய ரத்த குழாய் நோயைத் தடுத்து கட்டுப்படுத்தும் குணம் உண்டு. தவிர, தானிய வகைகள் அதிக நார்சத்து கொண்டுள்ளன. இவை இரைப்பை புழுவதை விரைவுப்படுத்தி, மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். இவற்றின் நன்மைகள் பற்றி பலர் அறிந்து இருக்கின்றனர்.. ஆனால், ஏன் இவற்றை தெரிவு செய்து உட்கொள்ள விரும்பவில்லை.

கோதுமை மாவு போல, மக்காச்சோள மாவு சுவையாக இல்லை என்று நகரவாசி ஒருவர் கூறுகின்றார்.

1 2