உண்மையி்ல், தானிய உணவு வகைகளை ருசியான உணவு வகைகளாக மாற்றுவது கடினம் அல்ல. அறுசுவை உணவு விரும் இல்லை. அறுசுவை உணவு விரும்பியான wen yi அம்மையார் கூறியதாவது
தானிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு முன், நன்றாக நீரில் ஊற வைப்பது முக்கிமானது. இவ்வாறு செய்தால், சமைக்கும் நேரத்தைக் குறைக்கலாம். தவிர, ஊற வைக்கப்படுவதால் அவை மெல்லியாக இருக்கும். உடலுக்கு உட்புகுத்தப்படுவதும் எளிது என்றார் அவர்.
தவிர, தானிய உணவு வகைகளை ஒட்டுமொத்தமாக உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர் yu kang பரிந்துரைத்தார். எடுத்துக்காட்டாக, ஒரு நாளில் 100 கிராம் அளவு தானிய உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தால், நண்பகல் 50 கிராம், இரவில் 50 கிராம் என்ற அளவில் சாப்பிடலாம்.
மேலும் இக்குறிப்பு அதிகமாகக் கவனிக்கப்பட வேண்டியது. வெவ்வேறான மக்களஇன் உடல் நிலையை கவனிப்பது என்பதாகும். இரைப்பை ஆற்றல் குறைவான மக்கள், குறிப்பாக முதியோர்களும் குழந்தைகளும் கூடுதலான நார்சத்துள்ள உணவை உட்கொள்ள கூடாது. அவர்களது கால்சியம் இரும்பு ஆகிய சத்துகள் பற்றாகுறையாக கொண்ட மக்களும் நார்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சாப்பிட கூடாது. தானிய உணவு வகைகளில் phytic அமிலமும், நார்சத்தும் உள்ளன. இவை இணைந்தால் உடம்பில் தாது பொருட்களை உட்கொள்வது பாதிக்கப்படும். செரிமானக் கோளாறு நோய்வாய்ப்பட்ட மக்கள், எடுத்துக்காட்டாக, ஈரல் அழற்சி, வயிற்றுப்புண் நோயாளிகள் அதிக தானிய உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவான மக்கள் நீண்டகாலமாக நாளுக்கு 50 கிராம் நார்சத்து உணவு பொருளை உட்கொண்டால், அவர்களது எலும்பு, இதயம் முதலிவை பாதிக்கப்படும். 1 2
|