• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-10 09:35:21    
காகித அல்லது தாள் குடைகள்

cri

காகித அல்லது தாள் குடைகள்

எண்ணெய்த்தாளாலான குடைகள் பொதுவாக ஃபூச்சியன் மற்றும் ஹூனான் மாநிலங்களைச் சேர்ந்தவை என்றே நம்பபடுகிறது. மிக நுட்பமான தயாரிப்பும், மிகத்தெளிவான அமைவும் கொண்டவை இவை. பூச்சி புழு அண்டாத வகையில் இந்த குடைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில் குச்சிகள் சிறப்பாக பண்படுத்தப்படுகின்றன அல்லது பதப்படுத்தப்படுகின்றன. இந்த குச்சிகளால் உருவாக்கப்படும் குடையின் கம்பிகள், பிடியும், ஆதாரக்கோலும் அழகாக வண்ணம் தீட்டப்பட்ட அல்லது பூ, பறவை, முதலியவை வரையப்பட்ட தாளால் அழகாக ஆடையாய் சூட்டப்படுகின்றன. பின் எண்ணெயால் ஒரு பூச்சு பூசப்பட்டு அற்புதமான குடை உருவாகிறது. அழகு மட்டுமல்லாது, நீண்ட நாள் உழைக்கும் விதத்திலும் இந்த குடைகளின் தயாரிப்பு மிக நேர்த்தியாக கையாளப்படுகிறது. காகிதக் குடைகள் சிறியதாக செய்யப்பட்டாலும் மற்ற கலைப்பொருட்களுக்கே உரித்தான கவனம் அதன் தயாரிப்பில் அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக ஃபூசோ காதிகக் குடைகளில், குடைக்குள் கம்பிகளாக பயன்படுத்தப்படும் மூங்கில்கள், ஃப்ப்ச்சியன் மாநிலத்தில் விளைந்த, 5 ஆண்டு வயதான மூங்கில்களாகவே உள்ளன. இந்த மூங்கில் குச்சிகள், பூச்சி அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளேதும் ஏற்படாதபடி சிறப்பு பதனீட்டு முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பொதுவாக ஒரு குடை ஏறக்குறைய 80 வகை செய்முறை அம்சங்களை கடந்தே உருவாகிறதாக கூறப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி ஒரு குடை 5 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. கம்பிகள், நடுப்பகுதியிலுள்ள ஆதாரக்கோல் அல்லது ஈர்க்கு, குடையின் மூடும் பகுதி, குடையின் மூடும் பகுதியில் காணப்படும் ஓவியம் அல்லது படம் மற்றும் குடையின் கொண்டை அல்லது தலை. குடையின் மேற்பகுதி சுத்தீர்கரிக்கப்பட்ட பருத்தித்தாளால் ஆனது. சாதரணத் தாள் அல்லது காகிதம் மரக்கூழால் தயாரிக்கப்படும் அல்லவா. பருத்தித்தாள், பருத்தி இழைகளால் செய்யப்படுகின்றன. ஆக இந்த பருத்தித்தாளாலான குடையின் மேற்பகுதி சாயம் அல்லது பெயிண்ட் பூசப்பட்டு, தங் எண்ணெய் எனப்படும் வார்னிஷ் போன்ற மெருகு எண்ணெய் பூசப்பட்டு, பறவைகள், வடிவங்கள், இயற்கைக்காட்சிகள் முதலியவை தீட்டப்படும். ஆக அழகான குடை தயார்.

1 2