• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 15:47:30    
நிழற்படக் கலைஞர் Wang Shui Lin ஆ

cri

A Niu என்னும் அந்த யீ இனப் பெண், அறிமுகமில்லாதவரான Wang Shui Linக்கு நெருப்பு மூட்டி வெப்ப வசதியை ஏற்பாடு செய்தார். இரவு முழுவதும் அப்பெண் உறங்கவில்லை. அடுத்த நாள் Wang Shui Lin மீண்டும் இங்கே வந்தார். சில பத்து கிலோ எடை கொண்ட படப்பிடிப்பு வசதிகளை ஏற்றிச்செல்வதில் Wang Shui Linக்கு உதவுமாறு மற்றொரு யீ இனப் பெண்ணுக்கு A Niu வேண்டுகோள் விடுத்தார். A Niu கைமாறாக எதையும் பெற ஒருபோதும் எண்ணவில்லை. இதன் பிறகு, இப்பிரதேசத்தைக் கடந்து சென்ற போதெல்லாம், Wang Shui Lin A Niuஐச் சந்தித்தார்.

Wang Shui Lin கூறியதாவது:

"ஒவ்வொரு இடத்துக்கும் சென்ற போது, உள்ளூர் மக்கள் எனக்கு மாபெரும் உதவி அளிக்கின்றனர். அவர்களின் உதவிக்கு கைமாறாக, என்ன செய்ய முடியும்? எழில் மிக்க இயற்கைக் காட்சிகளை நிழற்படம் எடுக்க, பல இடங்களுக்குச் சென்றேன். இதன் மூலம் அவர்களுக்கு கைமாறு அளிக்கலாம் என்று நினைத்தேன். 2005ஆம் ஆண்டு, யாங் சி ஆற்றின் முதலாவது வளைகுடா அமைந்துள்ள Shi Gu நகருக்கு 20 முறை சென்றேன். அங்கே 20 முறை உயர்ந்த மலையில் ஏறினேன். இறுதியில் ஒரு நிழற்படத்தை வெற்றிகரமாக எடுத்தேன்" என்றார், அவர்.

இங்கே சுமார் ஆயிரம் முறை நிழற்படங்களை எடுத்த பின்,இறுதியில் Wang Shui Lin தேர்வு செய்த அந்த நிழற்படம், "யாங் சி ஆற்றின் முதலாவது வளைகுடா" என அழைக்கப்படுகிறது. யுன்னான் மாநிலத்தின் தலைநகரான Kun Mingகிற்கு சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Shi Gu நகரில் ஒரு மலை உச்சியில் அவர் இப்படத்தை எடுத்தார். அப்போது, மழை பெய்த பிறகான தெளிவான, நீல வானம் இருந்தது. பசுமையான மலையை யாங் சி ஆற்றின் முதலாவது வளைகுடா சுற்றி வளைக்கும் அருமையான காட்சி Wang Shui Linயால் நிழற்படத்தில் பதிவு செய்யப்பட்டது.

1 2