ஒன்றில் மூன்று
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதை போன்று ஒரே இணைப்பில் மூன்று வசதிகளை வழங்கபோவதாக சீனா அறிவித்துள்ளது. அதாவது உயர் திறன் கொண்ட ஒளி இழையால் ஆன இணைப்பு மூலம் மூன்று வசதிகளை ஒருமித்து வழங்கும் வலைபின்னலை நாடு முழுவதும் உருவாக்க போவதாக அறிவித்துள்ளது. இணையம், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வசதிகள் ஒன்றாக வழங்கப்படுவதற்கான வலைபின்னலாக அமைவதே இதன் சிறப்பம்சமாகும். அதனை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும், வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றிற்கான தேசிய நிர்வாகமும் இணைந்து உருவாக்கியுள்ளது. தற்போதைய அகன்ற அலைவரிசை இணையத்தின் வேகத்தை விட, இந்த புதிய வலைபின்னல் மூலம் வழங்கப்படும் அகன்ற அலைவரிசை இணைய வசதியின் வேகம் 100 மடங்கு அதிகமாக இருக்குமாம். இந்த வலைபின்னல் Yangtze ஆற்றின் கழிமுகப் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் பயன்படுத்தும் விதமாக டிசம்பர் 2006 முதல் சோதனை செய்யப்பட்டது. ஆய்வக மற்றும் சோதனைகள் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு இந்த வலைபின்னல் மென்பொருள் ஏற்றதென உறுதி செய்துள்ளன. 1 2
|