பொதுவாக அக்காலத்தில் திருமணம் நடைபெறும் அறையில் அல்லது முதலிரவு அறையில் சீனப் பேரீச்சம் பழ, நிலக்கடலை, கஷ்கொட்டை முதலிய விதை, பயறு வகைகளை தூவுவர். நலமான குழந்தைகள் உடைய ஒரு முதியவரிடம் ஒரு தட்டில் இந்த பலவகை பயறுகளையும், விதைகளையும் தந்து, இணைகள் தங்கவுள்ள அறையில் நாலாபுறமும் தூவச்சொல்வார்களாம். சீனப் பேரீச்சையின் பாதி தொனி சீக்கிரம் குழந்தை பெறுவது என்று ஒலிக்கும், கஷ்கொட்டையின் பொருள் அழகான பெண் குழந்தை, நிலக்கடலைக்கு மகனும் மகளும் என்று பொருள். இப்படி அனைத்து விதைகளும், பயறுகளும் அடையாளப்படுத்துவது, திருமணம் முடித்த இணை விரைவில் குழந்தைச் செல்வம் பெறவேண்டும் என்பதே.
1 2
|