வரலாற்றுப் பதிவுகளின் படி, இந்த விதைகளையும், பயறுகளையும் அறையில் தூவும் வழமை ஹான் வம்ச பேரரசர் வூவின் காலத்தில் துவங்கியதாக தெரிகிறது. லி என்பவரை பேரரசர் மணந்தபோது, அவர் தனது பணியாட்களை அழைத்து, மகிழ்ச்சியான இல்லறத்தை அடையாளப்படுத்த தங்களது அறையில் இப்படி பல விதைகளையும், பயறுகளையும் தூவச் சொன்னாராம். அதற்கு பின் திருமணங்களில், இணைகள் தங்கியிருக்கும் அறையில் இப்படி விதைகளையும், பயறுகளையும் நாலாபுறமும் தூவிவைக்கும் வழமை தொடர்ந்தது. பின்னாளில் ஒரு சிலர் வண்ண வண்ண காகிதத்துண்டுகளையும் அறையில் தூவத் தொடங்கினார்களாம். நம்மூரில் முதலிரவு அறையை மலர்களால் அலங்கரிப்பது போல், இங்கே அறையில் விதைகளையும் பயறுகளையும் தூவுகிறார்கள் என்று உங்களுக்குள் ஒரு குரல் சொல்லுகிறதா? 1 2
|