திபெத் அமைதியாக விடுதலை செய்யப்படும் முன், திபெத்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காடாக இருந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், 95 விழுக்காடு சமூகச் செல்வங்களைக் கொண்டிருந்தனர். தவிர, அவர்கள், அடிமைகளின் சுதந்திரத்தையும் தங்கள் கையில் வைத்திருந்தனர். திபெத் அமைதியாக விடுதலை செய்யப்பட்ட பின், குறிப்பாக, ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், இலட்ச கணக்கான வறிய அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். அவர்கள் கனவு கண்டு மிகவும் எதிர்பார்த்த வாழ்க்கை மற்றும் உற்பத்தி மூல வளங்களையும் உரிமையாக கொண்டுள்ளனர். 1980ம் ஆண்டுகள் முதல், சீன நடுவண் அரசு, திபெத்தில் குடும்ப நிர்வாகம், சந்தைக் கட்டுப்பாடு ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட உற்பத்தி நிர்வாகக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன், கிராமப்புறங்களின் உழைப்பு உற்பத்தி ஆற்றல் சுதந்திரமாக பயன்படுத்தப்படுகிறது. வேளாண்மை வரி விலக்கு, விவசாயப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவதற்கான மானியம் முதலிய விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளைச் செயல்படுத்திய பின், பல விவசாயிகள் மற்றும் ஆயர்கள் அதிக நலன்களைப் பெற்றுள்ளனர்.
1 2 3
|