காலணி செருப்பு ஆகியவை எங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களாகும். ஆனால் விடுதலை பெறுவதற்கு முன் திபெத்தின மக்களின் வாழ்க்கையில் இவை ஆடம்பர பொருட்களாக கருதப்பட்டன. இது பற்றி ஆய்வாளர் ஆன் ஸாய் தான் கூறியதாவது.


எங்கள் வாழ்க்கையில் காலணிகள் சாதாரண பொருட்களாகும். ஆனால் விடுதலை பெறுவதற்கு முந்திய திபெத்தில் பண்ணை அடிமைகள் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடும்பங்கங்களில் காலணிகள் ஆடம்பர பொருட்களாக கருதப்பட்டன. வறிய குடும்பங்களில் 7 பேர் ஓர் இணை காலணியை அணிந்தனர். யார் சம்பாதிக்க வேண்டி உழைக்க செல்கிறாரோ அவர் இந்த காலணிகளை போட்டு வெளியே சென்றார். குடும்பத்திலுள்ள ஏனையோர் வீ்ட்டிலே காலணிகள் அணியாமலே இருந்தனர். இப்போது திபெத்தின மக்களின் வாழ்க்கையில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு திபெத்தின குடும்பத்திலும் காலணிகள் ஒதுக்கி வைக்கப்படும் பெட்டி வீட்டின் முன்னால் பொருத்தப்படுகின்றது. ஒருவருக்கு பல்வகை காலணிகள் உள்ளன. இவற்றில் விளையாடுவதற்கான காலணிகள், விருந்தினர்களை வரவேற்கும் போது பயன்படுத்தும் காலணிகள், கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள பயன்படுத்தப்படுபவை, குளிர் காலங்களில் பயன்படும் தோல் காலணிகள் முதலியவை அடக்கம்.
1 2 3
|