வடக்கிலிருந்து படையெடுத்து வருவோரிடமிருந்து பேரரசரையும், மக்களையும் காப்பாற்ற எழுப்பப்பட்ட அரணால் கோட்டைக்குள்ளான நகரமாக பெய்ஜிங் விளங்கியது. அரணை கடந்து மக்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நுழைவாயில்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பெய்ஜிங்கை சுற்றி அமைந்த இந்த நுழைவாயில்கள் 1950 களில் தகர்க்கப்பட்டன. இன்றைக்கு மூன்று நுழைவாயில்கள்கள் மட்டுமே பெய்ஜிங்கில் காணப்படுகின்றன. அவை ச்சியான்மன் (Qianmen), தெஷெங்மன் (Deshengmen) கண்காணிப்பு கோபுரம் மற்றும் யோங்திங்மன் (Yongdingmen) வாயில்கள்.
1 2 3
|