சான்குவா கோயில், 900 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இது வரை, சீனாவில் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய, லோ, சின் கோயிலாக இது விளங்குகிறது. சீனாவில் புகழ் பெற்ற படைப்பாளர் fengjicai, இக்கோயிலை ரசித்தார். அங்குள்ள சிற்பக் கலைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டதாக கூறினர். சீனாவின் சிற்பக் கலை, பெய்வே வம்சத்தின் போது, மறுமலர்ச்சியடைந்தது. 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு, இது சீராக வளரவில்லை. இதில், சுமார் ஆயிரம் ஆண்டுகால சிலைகள் பலவற்றை, தாதுங் நகரில் காணலாம். பல்வேறு வம்சத்தின் சிறந்த சிற்பக் கலைகள், இந்நகரத்தில் உள்ளன. உலக மரபுச் செல்வங்களான இந்த சிலைகள், உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பாடு மற்றும் எழுச்சிச் செல்வங்களாகும் என்று அவர் கூறினார்.
நண்பர்களே, சீனாவின் சிலை நகரம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
1 2
|