சொர்க்கக் கோயில்
சொர்க்கக் கோயில் அல்லது வானுலகக் கோயில் 1420ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டதாகும். கிபி 1368 முதல் 1644ம் ஆண்டு வரையான மிங் வம்ச அரசர்களும், 1644 முதல் 1911ம் ஆண்டு வரையான ச்சிங் வம்ச அரசர்களும் இந்த கோயிலை வானுலகுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் இடமாகவும், நல்ல விளைச்சலுக்காக இறை மன்றாடும் இடமாகவும் கருதினர்.
இங்குள்ள டான்பி பாலம் மிகச் சிறப்பான வகையில் பேணப்பட்டது எனலாம். உண்மையில் அது பெரிய பாலம் அல்ல, ஒரு வகை பாதை மட்டுமே. இருப்பினும் தரையிலிருந்து 4 மீட்டர் உயரத்தில் அமைந்ததாலும், அதன் கீழே சுரங்கம் போன்ற வழி இருப்பதாலும் இது ஒரு பாலமாக அழைக்கப்பட்டது, கருதப்பட்டது. இந்த பாலத்தில் இடது, நடுப்பகுதி மற்றும் வலது பகுதி என மூன்று பகுதிகள் இருக்கின்றன. இதில் இடதுபுறம் பேரரசருக்கு மட்டுமே உரித்தானது, வலதுபுறம் அரண்மனை அதிகாரிகளுக்கானது, நடுவில் உள்ளது மனிதர்கள் பயன்படுத்த அல்ல, வானுல்க தேவர்கள், கடவுளர்கள் செல்லவேண்டும் என்பதால் அதை யாரும் பயன்படுத்துவதில்லையாம். இந்த பாலத்தின் வழியாகத்தான், இதில் மட்டுமேதான் பேரரசர் வானுலக கடவுளர்களிடம் நல்ல விளைச்சலுக்காக வேண்டுதல் செய்ய இறை மன்றாட்டக் கூடத்துக்கு செல்வாராம்.
பாலத்தில் கீழுள்ள சுரங்கம் போன்ற ஊடுவழி ஷெங் வாயில் என்று அழைக்கப்பட்டது. இதன் வழியாகத்தான் பசுக்களும், ஆடுகளும் பலிகொடுப்பதற்காக வழிநடத்தி செல்லப்பட்டன. தான்பி பாலம் புனிதமானதாக கருதப்பட்டதால் விலங்குகள் இப்பாலத்தின் வழியே அனுமதிக்கப்படுவதில்லை, கீழேயுள்ள சுரங்கத்தின் வழியே அவை பலிகொடுக்கப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சுரங்கவழியை நரக வாயில் என்றும் அழைத்தார்கள், எனவே பொதுவாக இதனூடாக செல்ல மக்கள் துணிவதில்லை. 1 2
|