• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-28 09:30:05    
சீனாவின் தற்சார்பு வேலை வாய்ப்பு வழிமுறை

cri

மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வேலை வாய்ப்பாகும். சீன இளைஞர்களின் வேலை வாய்ப்பு வழிமுறையை பார்க்கும் போது, 1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், சீன அரசு பங்கீட்டு வழிமுறையை மேற்கொண்டது. அதன் பின், சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடனும், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புடனும், சீன மக்களின் வேலை வாய்ப்பு வழிமுறை தற்சார்புத் தெரிவில் நுழைந்தது. தற்போது, தங்களது விருப்பத்திற்கேற்ப, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார்கள் தங்களது பணியை தேர்ந்தெடுக்கலாம்.
பெய்சிங் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் Feng Fan அம்மையார், கடந்த 20 ஆண்டுகளாக, மாணவர் வேலை வாய்ப்புப் பணியில் பங்காற்றி வருகின்றனர். கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில், சீன அரசு உடைமை தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் பங்கீட்டு வழிமுறையில் பணியமர்த்தப்பட்டனர். வேலை வாய்ப்பு நிர்ப்பந்தத்தை எதிர்நோக்காத போதிலும், பணிகளை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்கள் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
கடந்த நூற்றாண்டின் 70, 80ம் ஆண்டுகளில், நாடு வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைப்பான வழிமுறை பங்கீடு செய்தது. நாட்டின் தேவைக்கேற்ப, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றோர் பணியமர்த்தப்பட்டனர் என்று அவர் கூறினார்.


கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டின் இறுதியில், சீனா சந்தை பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொண்டதுடன், பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு வழிமுறை மாபெரும் மாற்றத்தை கண்டது. தங்களது விருப்பத்தின் படி, பட்டதாரிகள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடிந்தது. தற்சார்பு வேலை வாய்ப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தியதற்கு பிந்தைய முதலாவது தொகுதி பட்டதாரிகளில் ஒருவரான 34 வயதான Liu Li சீனாவின் ஷான்துங் மாநிலத்தின் யாங் தாய் நகரின் பங்கு பத்திர தரகுர் நிறுவனத்தில் பணி செய்தார். 1998ம் ஆண்டு, சான் சி நிதி மற்றும் பொருளாதார கழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற அவர், தற்சார்பு வேலை வாய்ப்பை எதிர்நோக்கிய போது, குழப்பம் அடைந்தார். அவர் கூறியதாவது:
நான் முதலில் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தேன். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, பணியை முன்முயற்சியுடன் தேடுவது பற்றி யோசிக்கவில்லை. நான் மிகவும் குழப்பினேன் என்று அவர் கூறினார்.
சிரமங்களை எதிர்நோக்குவதில், தமது மன நிலையை Liu Li சரிபடுத்திக் கொண்டார். இந்த வாய்ப்பு தனது வாழ்க்கையின் பொருளை கோடிட்டுக்காட்டலாம் என்று அவர் தகுதினார். அவர் கூறியதாவது:
என்னை பொறுத்த வரை, தற்சார்பு வேலை வாய்ப்பு நல்ல வாய்ப்பாகும். இளைஞர்களுக்கு ஆற்றலும் திறமையும் உண்டு. அவர்கள் தங்களுக்கு பொருத்தமான பணியை தேடலாம் என்று அவர் கூறினார்.

1 2