• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-01 10:40:22    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். கடிதங்களும், மின்னஞ்சல்களும், ஒலிப்பதிவுமாக எம்மை வந்தடைந்த உங்களது கருத்துக்களை தொகுத்து இன்றைய நிகழ்ச்சியிலும் வழங்குகிறோம்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் கடிதம், மின்னஞ்சல் வாயிலாக கருத்துக்களை அனுப்பி வரும் அன்புள்ளங்களுக்கு எமது நன்றிகள்.
கலை: அன்பு நேயர்களே, நிகழ்ச்சிகளை கேட்பதோடு நில்லாமல் நேரம் கிடைக்கும்போது சில வரிகளில் உங்கள் எண்ணங்களை பதிவு செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் கருத்துக்கள் எமது பணியை செழுமையாக்க பேருதவியாக அமையும் என்பதை மறக்கவேண்டாம்.
க்ளீட்டஸ்: சரி, நிகழ்ச்சியின் முதலில், ஒலிப்பதிவின் வழியே தமது கருத்துக்களை அனுப்பிய நேயர்களின் பகிர்வை கேட்கலாம்.
கடிதப்பகுதி:
கலை: வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் எழுதிய கடிதம். நேயர் கடிதம் பகுதியில், இலங்கை காத்தான்குடியை சேர்ந்த ஹுசேன் என்ற நேயரின் பெயர் மின்னஞ்சல் அனுப்பியோர் பட்டியலில் இடம்பெற்றதை கேட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். இலங்கையிலிருந்து மின்னஞ்சல்கள் அதிகமாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். வான் அஞ்சல் பகுதியில் பரவலாக தமிழக நேயர்களின் பெயர்களும் இடம்பெற்றன. இதுவும் நல்ல அறிகுறிதான். தொடர்ந்து அதிக கடிதம் எழுதுமாறு ஒவ்வொரு நேயரையும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
க்ளீட்டஸ்: குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சிறப்புப்பரிசு பெற்று சீனாவுக்கு வந்த முனுகப்பட்டு கண்ணன் சேகரோடு தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசி அவர்கள் உரையாடியதை கேட்டென். சீனாவில் தான் பார்த்த, ரசித்த பலவற்றை தன்னுடைய அனுபவ பகிர்வாக கண்ணன் சேகர் குறிபிட்டார். சீன உணவு, சீன வானொலி தமிழ்ப்பிரிவின பணியாளர்கள் மற்றும் சீன மக்கள் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்கின்றனர் என்பதை அவர் அழகாக விளக்கினார். அவருக்கு பாராட்டுக்கள்.


கலை: சிச்சுவான் மாநிலத்தில் தொல்பொருள் பாதுகாப்பு என்ற செய்தித்தொகுப்பு பற்றி மதுரை – 20 என். ராமசாமி எழுதிய கடிதம். கடந்த ஆண்டு மே 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால் மாபெரும் இழப்பு ஏற்பட்டது. பல தொல்பொருட்கள், மரபுச் செல்வங்கள் சேதமடைந்தன, நாசமாயின. ஆனால் சீன அரசு இதை சீர்படுத்தி பாதுகாக்க 500 கோடி யுவானை ஒதுக்கி செப்பனிடும் பணியை மேற்கொண்டது. 5 ஆண்டுகளில் இப்பணி நிறைவடையும், சிச்சுவான் மாநில தொல்பொருட்கள் பாதுகாப்புடன் மீட்கப்படும் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
க்ளீட்டஸ்: இலங்கை ஹெம்மத்தகமவை சேர்ந்த ரிஸ்வானா உபேய்த் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். செய்திகளின் மூலம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விரைவில் நடைபெறவுள்ளது பற்றிய தகவல்களை கேட்டேன். அதில் இலங்கை உட்பட பல நாடுகள் கலந்துகொள்ளும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். செவ்வாய் கிழமை நேருக்கு நேர், ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பம் நிகழ்ச்சிகள் எனக்கு பிடித்தமானவை.


கலை: மக்கள் சீனம் நிகழ்ச்சி குறித்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். மக்கள் சீனம் நிகழ்ச்சியில் பெய்ஜிங்கிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த வடசீனாவிலான உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரதேசம் பற்றி கூறக் கேட்டேன். கனிம மூலவளங்கள் மிகுந்த சாங்தோ நகரை சுற்றுப்புறச் சீர்கேட்டு பிரச்சனையிலிருந்து சீன அரசு எவ்வாறு பாதுகாத்து வருகின்றது என்பதை தெளிவாக அறிந்துகொண்டேன். தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஈஸ்வரிக்கு நன்றி.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை வி. துரைராஜா எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திபெத் பற்றிய அருமையான தகவல்கள் இடம்பெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உலகில் கடல்மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்த பீட பூமியாகும். நிலவியல், புவியியல் அமைவுகள், காலநிலை என பல சவால்கள் கொண்ட இப்பிரதேசம் பற்றிய அறிந்துகொள்ள நிகழ்ச்சி உதவியது. தமிழ்ப்பிரிவுக்கு நன்றி.


கலை: சீன இசை நிகழ்ச்சி குறித்து திருப்பூர் ரெய்கி. செ. வேதமூர்த்தி எழுதிய கடிதம். நாட்டுப்புற சீனமொழி பாடல்கள் சிலவற்றை இசை நிகழ்ச்சியில் கேட்டேன். செழிப்பான காடுகள் மீதான பற்றை ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுவதாக அமைந்த பாடல் சுவையாக இருந்தது. மற்ற பாடல்களும் தேனாற்றில் மிதந்து வரும் கற்கண்டாய் இனித்தன.
க்ளீட்டஸ்: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா. கே. கே. போஜன் எழுதிய கடிதம். பொதுவாக இறைச்சியுடன் உருளைக்கிழங்கையோ, தேங்காயையோ சேர்த்துதான் எங்கள் ஊருகளில் சமைப்பார்கள். முதல் முறையாக கோழியிறைச்சியோடு பூசணிக்காயை சேர்த்து சமைப்பதை பற்றி சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கேட்டேன். இனிப்பான பூசணி, கோழி இறைச்சியோடு சேர்த்தால் எப்படியிருக்கும் என்பதை சமைத்து பார்த்து ருசிக்கவேண்டும். தேவையான பொருட்களும் அதிகமில்லை, செய்முறையும் எளிது என்பதால் நிச்சயம் இதை சமைத்து பார்க்கவேண்டும்.

1 2