வெவ்வேறு பருவகாலத்திற்கேற்ப புல் வகைகளின் வேறுபட்ட வளர்ப்புக்காலத்தின் படி, மேய்ச்சல் காலம் நிர்ணயிக்கப்படுகின்றன. எவ்வளவு புல் வெளி வளர்கின்றதோ, அந்த அளவுக்கு ஏற்ப ஆடுமாடுகளை மேய்க்கின்றோம். இவ்வாறு கால் நடை இனங்களை சீர் செய்வதில் ஆயர்களின் உற்சாகத்தைத் தட்டி எழுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.
கால் நடை இனங்களை மேம்படுத்துவதைப் பரவலாக்குவதில் ஆயர்களுக்குத் தொழில் நுட்ப பயிற்சியை அரசு அளிக்கின்றது. ஆயர்கள் இலவசமாக அறிவியல் அறிவைக் கற்றுக்கொள்ள முடியும். இவர்களுடைய அறிவியல் அறிவு அதிகரிப்புடன் இவர்களுடைய வாழ்க்கைத் தரமும் குறிப்பிடத்தக்க அளவில்உயர்ந்துள்ளது. இப்போது அவர்களின் சராசரி ஆண்டுவருமானம் 1650 யூவான் ஆகும். முழு மாவட்டத்திலும் 125 கிராமங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பமும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்டும் கண்டும் களிக்கலாம். விவசாயிகளும் ஆயர்களும் வீட்டில் இருந்த வண்ணம் அரசு விவகாரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. 1 2 3
|