சமூகத்தின் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு, குணமடைந்த எய்ட்ஸ் நோயாளிகள், ஏதேனும் பணியில் சேரலாம்.
சிகிச்சை மட்டுமே போதுமானதல்ல. உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு, பொருளாதார நிவாரணம் ஆகியவற்றுடன் அது இணைக்கப்பட வேண்டும் என்று Dai கூறுகிறார்.
HIV அதிக அளவில் காணப்படும் 50 முதல் 100 கவுண்டிகளில், எய்ட்ஸ் சிகிச்சை திட்டத்தைச் சீன அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்குவதற்கென, இலட்சக்கணக்கான யுவான் தொகையை ஒதுக்கியுள்ளது.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரத்த தானம் செய்த போது, HIV தொற்றுக்கு ஆளானவர்களுக்கே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹோநான் அன்ஹுய் ஆகிய 2 மாநிலங்களில் இத்தகைய எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். ரத்த தானம் செய்த ஏழைகள், மோசமான சுகாதாரமற்ற ஊசி காரணமாக, எய்ட்ஸ் வைரசுக்கு ஆளாயினர்.
அடுத்த கட்டமாக, மற்ற வகை எய்ட்ஸ் நோயாளிகள் மீது சீன ஆராய்ச்சியாளரின் கவனம் திரும்பியுள்ளது.
பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளானோர் சீனாவில் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
1 2 3 4 5 6
|