எண்பதுகளில், இந்த எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது.
போதைப் பொருள் பயன்படுத்துவோர், முதல் வகையில் இடம்பெறுகின்றனர். தென்மேற்கு சீனாவில் இவர்கள் அதிகமாக உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளில், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்திலிருந்து, நாடு முழுவதும் எய்ட்ஸ் பரவி விட்டது.
போதை மருந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளில், போதை மருந்து பயன்படுத்துவோர், மொத்த எண்ணிக்கையில் 53.3 விழுக்காடு ஆகும். இவர்களில் 40 விழுக்காட்டினர், ஊசிகளைப் பகிர்ந்து கொண்டு பயன்படுத்துகின்றனர்.
அடுத்த வகையினர்—பாலியல் தொழிலாளர். எய்ட்ஸ் வைரசு பரவுவதற்கு, பாலியல் உறவு மிகச் சிறந்த ஊடுவழியாகி வருவதாக, ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
சீனாவில், 1985க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில், பாலியல் நோய்க்கு ஆளானோர் எண்ணிக்கை 100 மடங்காகியிருக்கிறது.
1 2 3 4 5 6
|