நினைவாற்றலையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியில், இந்நோய் தோன்றுகிறது. பிறகு, மூளையின் பிற பகுதிகளுக்குப் பரவுகிறது. மூளை மீதான இந்நோயின் தாக்குதல், உயிருக்கு உலை வைக்கப்கூடியது. 8 முதல் 10 ஆண்டு வரை, இந்நோய் நீடிக்கிறது. சிலர், வெகு விரைவில் மரணம் அடைவதுண்டு, சிலர் 20 ஆண்டு வரை உயிர் வாழ்வதுமுண்டு.
மூளையின் செல்கள் பாதிக்கப்படுவதால், உடலின் முக்கியமான பிற பகுதிகளும் பாதிக்க வழியேற்படுகின்றது.
ஆனால், அல்ஷிமர் நோயால் பாதிக்கப்படுவோரின் மரணத்துக்கு, இந்நோய் மட்டுமே காரணமாகாது, ஏனெனில், பல நோயாளிகள், வேறு சில நோய்களையும் கொண்டுள்ளனர்.
மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால், மூளையில் வழக்கத்துக்கு மாறாகப் புரோட்டீன் குவிந்து கிடப்பது, அல்ஷிமர் நோய்க்கு அடையாளமாகும். புரோட்டீன்கள் இவ்வாறு திரள்வதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அறிவியலாளர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
1 2 3
|