பரம்பரையும், இந்நோய் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது. பெற்றோருக்கு இந்நோய் இருந்திருக்குமேயானால், பிள்ளைகளுக்கு இது ஏற்படும் அபாயம் அதிகமாகத் தென்படுகிறது.
நினைவு இழப்பு அல்லது மறதியில், அல்ஷிமர் நோய் ஆரம்பமாகிறது. மூக்கு கண்ணாடி, சாவி போன்றவற்றை எங்கே வைத்தோம் என்று மறக்க ஆரம்பித்தால், இந்நோயின் அறிகுறி ஆரம்பமாகிறது. படிப்படியாக இந்த மறதி, விரிவடைகிறது.
காசோலையை நிரப்ப முடியாமல் தவிப்பது, அல்லது வழக்கமான அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் திணறுவது என பிரச்சினை அதிகரிக்க வாய்ப்புண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக, அல்ஷிமர் நோயாளிகள், தங்களைத் தாமே கவனித்துக்கொள்ள முடியாது என்பது வருத்தத்திற்குரியது.
ஆவல் அதிகரிப்பு, எரிச்சல், ஆகியவற்றுக்கு இந்நோயாளிகள் ஆளாவதுண்டு. தவிர, இல்லாத பொருட்களை இருப்பதாகக் காண்பார்கள்.
ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று தெரியாத ஒரு நோய்-அல்ஷிமர்.
குணப்படுத்த வழியில்லாத நோய்-அல்ஷிமர் நமக்கு முதுமை வந்தால்-அல்ஷிமர் நோய்க்கு கொண்டாட்டம்.
இந்த நோய்க்குப் பலியான ரோனால்ட் ரேகனின் ஆன்மா சாந்தியடைவதாக! 1 2 3
|