1980ம் ஆண்டுகளில், உருமுச்சியிலிருந்து கா ஷி சென்றடைய மூன்று நாள் பிடித்தது. ஆனால், உயர்வேக நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட்டதால், நிலைமை மாறி விட்டது என்று சிங்கியாங்கின் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் காணப்பட்ட மாற்றம் பற்றி அவர் கூறினார்.
முன்பு, பாதை சீராக இல்லை. எனவே, வண்டியும் விரைவில் பழுதடையும். பயணிகள், தொலைத்தூர பயணி வண்டியில் பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை. இப்போது பாதை சீராக இருப்பதால், வண்டி தடையின்றி இயங்குகின்றது. பயணிகளும் அதிகரித்துள்ளனர் என்றார், அவர்.
கடந்த பத்து ஆண்டுகளில், சிங்கியாங்கில் நெடுஞ்சாலையின் கட்டுமானம் விரைவாக நடைபெற்று வருகின்றது. உருமுச்சி-கா ஷி உயர்வேக நெடுஞ்சாலை தவிர, உருமுச்சியை மையமாகக்கொண்டு கிழக்கு, மேற்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் 400 கிலோமீட்டர் நீள உயர்வேக நெடுஞ்சாலை, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 2 3
|