உருமுச்சி நகருக்குக் கிழக்கில் 270 கிலோமீட்டர் தொலைவிலான துலுங்பான் பிரதேசம், சிங்கியாங்கின் புகழ்பெற்ற, காய்களும் பழங்களும் விளையும் ஊராகும். 1998ம் ஆண்டுக்கு முன், காலையில் உந்துவண்டி மூலம் துலுங்பானிலிருந்து புறப்பட்டு, இரவுக்குள் உருமுச்சி சென்றடைய முடியும். ஆனால், இப்போது உயர்வேக நெடுஞ்சாலை இருப்பதால், 4 மணிநேரம் மட்டும் போதுமானது; எனவே, துலுங்பான் வாழ் மக்கள், உருமுச்சியில் பொருளை வாங்க மிகவும் விரும்புகின்றனர். முஹமய் ஜினஹாதி என்பவர், உந்து வண்டியின் உதிரி பாகங்களை வாங்குவதற்காக, உருமுச்சி சென்றுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், நான் உருமுச்சிக்கு வந்த போது, பாதையில் நடப்பது சிரமமாக இருந்தது. அதிக நேரமும் பிடித்தது; இப்போது, உயர்வேக நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட்டதால், உதிரி பாகங்களை வாங்கிக் கொண்டு, ஒரேநாளில் வீடு திரும்ப முடிகிறது என்றார், அவர். 1 2 3
|