ஒளிமயமான வசந்தகாலம், பெய்ஜிங் நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பிங் கு மாவட்டத்தில், ஆயிரம் ஹெக்டர் பரப்பில், பீச் மலர் பூத்துக் குலுங்குகிறது. இந்த மணமிக்க பீச் மலர் கடலானது, உள்ளூர் மக்களின் வாழ்க்கையை அழகுப்படுத்தி, வளமடையச் செய்துள்ளது.
பீச் மரங்கள் தழைத்து வளரும் பாதை அருகே, வாங் சே சுன் எனும் விவசாயி ஒருவரை எமது செய்திமுகவர் சந்தித்துரையாடினார். வாங் சே சுன் கூறியதாவது,
"வண்டுகளைப் பயன்படுத்தி பூச்சிகளை ஒழிப்பதன் மூலம், என் பீச் மரங்களைப் பாதுகாக்கிறேன். கிருமி நாசினி தேவையில்லை. இப்படி விளையும் பீச் பழத்தில் பூச்சி இல்லை. பழம், இனிப்பு மிக்கது" என்றார் அவர்.
1 2 3 4
|