இதுவரை வாங் சே சுன் குடும்பம் 500க்கு அதிகமான பீச் மரங்களை நட்டுள்ளது. முன்னர் அவர் குடும்பம் கோதுமை மட்டும் பயிரிட்டு வந்தது. மண் வளமற்றது என்பதால், தானிய விளைச்சல் குறைவு. ஆண்டு வருமானமாகச் சுமார் 10 ஆயிரம் யுவானைப் பெற முடிந்தது. பின்னர், உள்ளூர் உழவுத் தொழில் நுட்ப வல்லுநர் இங்கு வந்து, பீச் மரங்களை நடுவதற்கு இந்நிலம் ஏற்றது என உணர்த்தினார். பீச் மரங்களை நட்ட பின்பு 2வது ஆண்டில் பீச் பழங்கள் விளையலாயின. அதிலும் அவ்வாண்டில் பீச் பழ விற்பனை மூலம் 70 ஆயிரம் யுவானைப் பெற முடிந்தது. 20 ஆயிரம் யுவான் முதலீடு போக, 50 ஆயிரம் யுவான் லாபம் கிடைத்தது. எனவே, பீச் மரங்களைத் தொடர்ந்து நட வேண்டும் என, அவரும் அவரது மனைவியும் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
1 2 3 4
|