வாங் சே சுன்னின் மனைவி வெய் சின் பொங், சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். அவர் கூறியதாவது,
"மற்றவரிடம் கூலி வேலை செய்வதற்கு கால வரையறை இருக்கிறது. இதை நான் விரும்பவில்லை. சுயமாகத் தொழில் நடத்துவதற்கு கால வரையறை இல்லை. வருமானம் அதிகம். பீச் பழங்களை விற்பதை தவிர, காய்கறிகளை விற்கிறேன். இவ்வாண்டு குறைந்தது 80, 90 ஆயிரம் யுவானைப் பெறலாம்" என்றார் அவர்.
பீச் மரங்களை நட்ட பின், வெய் சின் பொங்கின் குடும்பம் புதிய வீட்டை வாங்கியது. ஊரிலுள்ள பழைய வீட்டைப் பழுது பார்த்துள்ளது. இப்போது அவர்கள் மேன்மேலும் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். தமது இரு குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தற்போதைய வாழ்க்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஓங்கி வளர்கிறது என்று கூறலாம்.
1 2 3 4
|