முன்னதாக நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில், சீன அணி ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டது. அமெரிக்கா அணி, கிரேக்க அணியையும் பிரேசில் அணி ஆஸ்திரேலிய அணியையும் ஜப்பானிய அணி, சுவீடன் அணியையும் தோற்கடித்தன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகை அண்மையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ஊக்கமருந்து எதிர்ப்பு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்திருப்பது ஆகியவை பற்றி தமது கருத்துக்களை தெரிவித்தார். சீர்திருத்தம் பற்றிய திட்டத்தில், போட்டி நிகழ்ச்சி அதிகரிப்பை நிறுத்துவது முதன்மையானது. எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து 500 ஆகம் விளையாட்டு எண்ணிக்கை 28ஆகவும் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 300ஆகவும் கட்டுப்படுத்தப்படலாம் என்று ரோகை கூறினார்.
1 2 3