சிங் சென் என்பது, இக்கிராமத்தின் பெயர். கிராமத்திலுள்ள பல பத்து குடும்பங்கள் அனைத்தும், மஞ்சு இனத்தைச் சேர்ந்தவை. ஒரு சதூர கிலோமீட்டர் பரப்பளவுடைய இச்சிறிய கிராமம் பற்றி, நிறைய கூறலாம். 400 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய சிங் வம்சகாலத்தின், முதலாவது பேராசர் லுர்ஹர்சாங், இக்கிராமத்தை தலைநகராக்கினார். இப்போது, இக்கிராமத்தின் தெற்குப்பகுதியில், உயரமான நகர வாசல் கட்டடம் பராமரிக்கப்படுகின்றது. "துங் கிங் செங்" என்ற மூன்று பெரிய எழுத்துகள், இதில் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போது, இக்கிராமத்தின் சுற்றுப்புற நகரின் சுவர், ஏற்கனவே இடிந்து விழுந்தது. நகரக்கட்டிடமும் பாழடைந்தது. கிராமவாசிகள், பெரும்பாலும், அப்போது நகர காவல் படையின் தலைமுறையினர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர்களின் தற்போதைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மஞ்சு இனத்தின் சில பழக்க வழக்கங்கள், தொடர்கின்றன. குறிப்பாக, குடியிருப்பிடங்களில், மஞ்சு இனத்தின் பாரம்பரியக்கட்டிடப்பாணியும், சில பழக்கங்களும் காணப்படுகின்றன.
1 2 3 4
|