
1000 ஆண்டுக்கு முந்தியவை அவை. இத்தகைய மரங்களின் இலை பெரியதல்ல. வெண்ணிற அடி மரங்கள் மட்டும் உண்டு. கற்பாறையில் வளரும் இம்மரங்கள் பலவிதமானவை. அவற்றில் சில, பயணிகளை வரவேற்கும் தெய்வம் போல் காணப்படுகின்றன. வேறு சில, தோகை விரித்தாடும் மயில் போல காட்சியளிக்கின்றன. இந்த வெண்ணிற தேவதாரு மரங்களில் எண்ணற்ற செந்நிறத் துணியும் நூல்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தமக்கு இன்பம் தருமாறு மக்கள் இம்மரத்தை வேண்டிக்கொள்கின்றனராம்.

பண்டைக்காலம் தொட்டு, தேவதாரு மரம், நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்கிவருகின்றது. முதியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், குழந்தை உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் மனதில் கொண்டு, செந்நிற நூலை இந்த வெண்ணிற மரங்களில் மக்கள் கட்டியிருக்கின்றனர் என்றார் அவர். சென்நுங் மலையானது, அரசு நிலை குரங்கு இயற்கை புகலிடமாகும். 9000க்கும் அதிகமான குரங்குகள் நாள்தோறும் இங்கு விளையாடுகின்றன. அவற்றில் சில, பயணிகளுடன் உறவாடுகின்றன. நிலக்கடலை, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பயணிகள் வீசியெறிந்தால், நீ முந்தி, நான் முந்தி என அவை அவற்றை எடுத்துத் தின்கின்றன. வழிகாட்டி லீ செஃவன் கூறியதாவது, ச்சியௌசுவில், தெளிந்த நீரோட்டம் உண்டு. சென்நுங் மலை, கம்பீரத்தினால் புகழ்பெற்றது. இது போல, சிங்தியெ ஆறு, தெளிந்த நீரினால் புகழ்பெற்றது.
1 2 3
|