யூவன் என்னும் தைய் இன நங்கை அவரை வரவேற்றார். யூவன் கூறியதாவது, தைய் இனக் கிராமமானது, 5 இயற்கையான கிராமங்களால் உருவாக்கப்பட்டது. இயற்கை காட்சியும் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளும் ஒன்றிணைந்த உயிரின வாழ்க்கைச் சூழலைக் கொண்ட கிராமமாகும். இக்கிராமத்தில் மொத்தம் 313 குடும்பங்கள் உள்ளன.
மக்கள் தொகை 1400ஐத் தாண்டியுள்ளது. தைய் இன மணம் கமழும் கட்டடங்களையும் பாரம்பரிய தைய் இனக் கைவினைப் பொருட்களையும் இங்கு கண்டுகளிக்கலாம். இது மட்டுமல்ல, தைய் இன மக்களின் வாழ்க்கையையும் உணரலாம் என்றார் அவர். 2 மாடி இடம்பெற்றுள்ள தைய் இன மக்களின் மூங்கில் வீடுகள், தென்னை மரம், பாக்கு மரம் ஆகியவற்றால் சூழப்பட்டவை. வீட்டின் முதலாவது மாடியில், சரக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது மாடியில், குடும்பத்தினர் வாழ்கின்றனர்.
|