இவ்வின மக்கள், மலைகளில் வசித்து, திருமணம் செய்து, குழந்தை பெறுகின்றனர். இது, அவர்களின் தனிச்சிறப்பியல்புடைய பழக்க வழக்கமாகும். சொந்த இனத்துவரிடையில் திருமணம் செய்வதை இன்று வரையிலும் அவர்கள் கண்டிப்பான முறையில் செயல்படுத்துகின்றனர். ஆனால், நெருங்கிய உற்றார் உறவினரிடையே திருமணம் செய்யக்கூடாது என்பு தடை விதிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக வெளியுறுடன் எதுவித தொடர்பும் கொள்ளாதமையினால் இது உருவாயிற்று. சொந்த இனத்தின் கறுப்பு நிற பாரம்பரியத்தை நிலைநிறுத்துவது, இதற்கு மற்றொரு காரணமாகும். இப்போது, சொந்த ஊரில் காதலிக்கவே இளைஞர்கள் விரும்புகின்றனர். ஆண்டுதோறும் வசந்தகால பாட்டு விழாவின் போது, காதலர் காதலியை அடைவதுண்டு.
1 2 3
|